Saturday, October 07, 2006

விநாயகர்

(தொகுப்பு: குடந்தய் வய்.மு.கும்பலிங்கன்)

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தமிழகப் பக்தப் பிரமுகர்கள் ஆயத்தமாகிக் கொண்டு வருகிறார்கள். விநாயகர் வரலாறு எந்த அளவுக்கு அசிங்கமும், ஆபாசமும், உண்மைக்கு மாறான செய்திகளும் கொண்டது என்பதைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களும், அவர்தம் தொண்டர்களாகிய நாமும் அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலமாகவே ஏட்டிலே எழுதியும், மேடையிலே பேசியும் விளக்கி வருகிறோம் என்றாலும் நாட்டு மக்கள் திருந்தியபாடில்லை. அவர்கள் அறிவு விளக்கமும், தெளிந்த சிந்தனையும் பெற வேண்டி அறிஞர்கள் பலர் நிகழ்த்தியுள்ள விநாயகர் பற்றிய ஆய்வுகளை ஈண்டுத் தொகுத்துத் தருகிறோம். கருத்து வழங்குகின்ற இவர்கள் அனைவரும் தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சுயமரியாதை இயக்கத்திற்குச் சிறிதும் தொடர்பு இல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் ஒருவர் அய்யங்கார் என்பதும், மற்றவர்கள் பழுத்த சைவ சமய அடியார்த் தொண்டர்கள் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.


1. முரண்பட்ட வரலாறு

பிள்ளையார் பற்றிய கதையை விளக்க வேண்டியது அவசியம். இந்த உண்மையை உணர்ந்த பின் பிள்ளையார் கடவுள்தானா? பிள்ளையார் பொம்மையை உடைத்ததனால் பெரியார் அவர்கள் என்ன அடாத செயலைச் செய்துவிட்டார் என்பதைத் தெளிவாக உணர முடியும்.
புராணக் கதைகளில் கணபதியின் பிறப்பே பல்வேறு விதமாகக் கூறப்பட்டுள்ளது. எது உண்மை என்பதை யாரும் கூறமுடியாது. ஆனால், ஒன்று தெளிவு. கற்பனையின் விளைவே கணபதி. கீழ்க்கண்ட பல்வேறு கதைகள் இதைத் தெளிவாக நிரூபிக்கின்றன.
கணபதி பெண் இல்லாமல் ஆணுக்குப் பிறந்தவர் என்றும், இதற்கு நேர் மாறாக ஆண் இல்லாமல் பெண்ணுக்குப் பிறந்தவர் என்றும் கூறப்படுகின்றன. புராணக் கதையில் கணபதியின் பிறப்பு அசிங்கமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. பார்வதி தன் உடல் அழுக்கை உருண்டையாக்கி விளையாடிக்கொண்டிருந்தாளாம். அந்த உருண்டையின் மீது அவள் அன்பு சொரிய அதற்கு உயிர் கொடுத்து அதைத் தன் மகன் என்று அழைத்தாளாம்.

மற்றொரு கதை: கணபதியின் பிறப்பை வேறுவிதமாகச் சித்திரிக்கிறது. பார்வதி தன் உடல் அழுக்கைக் கழுவி அதைக் கங்காநதியின் முகத்துவாரத்தில் உள்ள யானைத் தலை இராட்சசி மாலினியைக் குடிக்க வைத்தாளாம். இதன் விளைவாக மாலினி கர்ப்பம் தரித்த பிறகு ஒரு குழந்தையைப் பெற்றாளாம். அந்தக் குழந்தையைப் பார்வதி எடுத்துச் சென்று விட்டாளாம்.

மேற்கூறிய கதைகள் அனைத்தும் கணபதிக்கு யானைத் தலை ஏன் வந்தது என்பதைத் தெளிவு படுத்த வில்லை. பிரம்மவைவர்த்த புராணத்தில் ஒரு கதை கூறப் பட்டுள்ளது. கணபதி பிறந்த நேரத்தில் சனி பார்வை தோஷத்தால் தலை இல்லாமல் பிறந்தாராம். கணபதியின் தாய் தன் குழந்தைக்குத் தலை இல்லையே என்று தேம்பித் தேம்பி அழ விஷ்ணு பகவான் ஒரு யானைத் தலையை ஒட்ட வைத்தாராம். ஆனால், °கந்த புராணம் இதை மறுக்கிறது. கணபதி தன் தாயின் வயிற்றில் இருந்தபோது சிந்தூரா என்ற இராட்சசி வயிற்றுக்குள் புகுந்து குழந்தையின் தலையைக் கடித்துத் தின்று விட்டாளாம். பிறந்த குழந்தைக்குத் தலை இல்லாமல் போகவே அக்குழந்தை யானைத் தலை கொண்ட கஜாசுரன் என்ற இராட்சன் தலையை வெட்டித் தன் கழுத்தில் ஒட்ட வைத்துக் கொண்டதாம். தலையும் கண்ணும் இல்லாத இக்குழந்தை தனக்குத் தலை இல்லையென்பதை எங்ஙனம் உணர்ந்தது. கஜாசுரனின் தலையை எப்படி வெட்டித் தன் கழுத்தில் ஒட்ட வைத்துக் கொண்டது என்பதை °கந்த புராணம் தெளிவுபடுத்தவில்லை.

"சுப்ரபேத ஆகமம்" என்ற நூல் கூறுவதாவது; சிவனும், பார்வதியும் யானைகளைப் போல் சம்போகம் செய்தார்களாம். இதன் விளைவாகப் பிறந்தது யானைத் தலைக் குழந்தையாம்.
(ஏ.எ°.கே. அய்யங்கார் எழுதிய, "பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா." என்ற நூலின் பக்கம் 36, 40, 41, 42)

2. விநாயகர் இடைக்கால வரவே!

அறிஞர்கள் சிலர் சங்க இலக்கியத்தில் விநாயகரைப் பற்றிய குறிப்பு காணப்படாததால் இடைக்காலத்தில் வந்த வழிபாடு விநாயகர் வணக்கம் என்பர். முதலாம் நரசிம்மவர்மன் தானைத் தலைவராகிய பரஞ்சோதியார் என்னும் சிவத்தொண்டர் இரண்டாம் புலிகேசியை வென்று அவன் தலை நகராகிய வாதாபியிலிருந்து எடுத்து வந்த கணபதியின் திருவுருவச் சிலையைத் திருச்செங்காட்டாங்குடியில் எழுந்தருளச் செய்தார் என்பர். இது உண்மைதான்.
ஞானசம்பந்தரும், "பொடி நுகரும் சிறுத் தொண்டர்கருள் செய்யும் பொருட்டாக கடி நகராய் வீற்றிருந்தான் கணபதிச் சரத்தானே" என்று பாடுகிறார்.
(டாக்டர் சோ.ந.கந்தசாமி, தமிழ்த்துணைப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் "ஞான விநாயகர்" என்னும் கட்டுரையில்+ பக்கம் 20)

3. பண்டை இலக்கியத்தில் விநாயகர் இல்லை

நம் தமிழ்நாட்டில் பண்டைத் தமிழ் நூல்களில் இவ்விநாயகர் வழிபாடு சொல்லப்படவில்லை. திருஞான சம்பந்தர் தன் தேவாரத்தில் விநாயகர் வழிபாட்டைப் பற்றிக் கூறியுள்ளார். உமையம்மை பெண் யானையின் வடிவு கொள்ளச் சிவபிரான் ஆண் யானை வடிவு கொண்டு யானை முகத்தை உடைய கணபதியைத் தோற்றுவித்தான் என்கிறார். சிறுத்தொண்டர் பரஞ்சோதி என்ற பெயரோடு வட பகுதியில் வாதாபி என்ற நகர் மேல் படையெடுத்துச் சென்று அந்நகரை அழித்து வெற்றி கொண்டு வந்தபோது அங்கு சிறப்பாகக் காணப்பட்ட கணபதியின் படிமத்தையும் கொண்டு வந்து தம்மூரில் கணபதீச்சுரம் செய்து வழிபட்டார் என்பதும், வாதாபி யிலிருந்து கொணர்ந்தமையால் வாதாபி கணபதி எனப் பெயர் பெற்றார் என்பதும் இங்கு நினைவு கூர்தல் வேண்டும்.

(தமிழாகரர் வித்துவான் செ. வெங்கடராமச் செட்டியார், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், "தன்னை நினையத் தருகிறான்" என்ற கட்டுரையில் பக்கம் 17)

(மேல் இரு கருத்துகளுக்கும் ஆதார நூல்: சிதம்பரம் முக்குறுணி விநாயகர் திருக்கடமுழுக்கு விழா மலர் 8+9+1978)

4. சிவனுக்குப் புதிய உறவு

பாடல் பெற்ற கோயில்களில் நாயன்மார் காலத்தில் விநாயகரை வைத்து வழிபட்டதாகத் தெரியவில்லை. விநாயகர் தமிழகத்துத் தெய்வம் அல்லர். முருகன் சங்க நூல்களில் இடம் பெற்றிருப்பது போல விநாயகர் இடம் பெறவில்லை. விநாயகர் வழிபாடு பம்பாய் மாகாணத்தில்தான் மிகுதியாகக் காணப்படுகிறது. அம்மாகாணம் பல்லவர் காலத்தில் பண்டைச் சாளுக்கியரால் ஆளப்பட்டு வந்தது. சிறுத் தொண்ட நாயனார் சாளுக்கியர் தலை நகரான வாதாபியைக் கைப்பற்றியபோது இப்புதிய கடவுளை அங்கு கண்டார். தாம் முன்னர் கண்டறியாத அத்திருவுருவத்தைக் கண்டதும் வியப்புற்று அதனை எடுத்து வந்து தம் ஊரில் சீராளதேவன் கோயிலில் வைத்து வழிபடலானார். அது முதல் சீராளன் கோயில் கணபதீச்சுரம் எனப் பெயர் பெற்றது என்பதே தெரிகிறது. இக்கணபதீச்சுவரமே சம்பந்தர் பாடல்களில் இடம் பெற்றது. பின்னர் நாளடைவில் இப்புதிய கடவுளுக்கும், சிவபெருமானுக்கும் உறவுமுறை கற்பிக்கப்பட்டது. அதன் பயனாக விநாயகர் சிவபெருமானுக்கு முதல் திருமகனாராகக் கருதப்பட்டார். இவ்விநாயகர் வாதாபியிலிருந்து குடியேறிய தெய்வம் என்பதை 'வாதாபி கணபதி பஜேம் பஜேம்' என்ற தோத்திரத்தாலும் நன்குணரலாம்.

(சைவப் பெரும்புலவர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் எழுதிய "சைவ சமயம்" என்ற நூலில் பக்கம் 62)

5-ஆம் நூற்றாண்டில் விநாயகர்

வடமொழியில் புராண நூல்கள் இயற்றினவர், இழிந்த மக்களின் நடையைக் காட்டிலும் அருவருக்கத்தக்கச் செய்திகளைப் பொய்யாகப் பிணைத்துக் கட்டிச் சிவபிரான் மேலும் உமைப் பிராட்டியார் மேலும் அவை தம்மை ஏற்றி யானை முகம் உடைய பிள்ளையார் அவ்விருவர் பால் நின்று தோன்றிய வரலாறுகளைப் பலவாறு ஒன்றோடொன்று மாறுபடப் பகர்ந்திருக்கின்றனர்.
யானை முகம் உடைய பிள்ளையாராகிய கடவுள் வணக்கம் கி.பி. 5ஆம் நூற்றாண்டின் ஈற்றிலாதல் 6ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலாதல் தோன்றியதாகல் வேண்டும்.
(மறைமலைஅடிகள் எழுதிய "தமிழர் மதம்" என்ற நூலில்+ பக்கம் 190)

6. விநாயகரின் மனைவியர் பட்டியல்

விநாயகர் தன்னை வணங்கியவர்க்கு விக்கினத்தை நீக்குவோரும், அவ்வகை வணங்காதவர் க்ரு விக்கினத்தைத் தருபவரும் ஆவார். இவர் சித்தி, புத்தி, வல்லபை, விஷ்ணு மூர்த்தியின் குமாரிகளாகிய மோதை, பிரமோதை, சுமகை, சுந்தரி, மனோரமை, மங்கலை, கேசினி, காந்தை, சாருகாசை, சுமத்திமை, நந்தினி, காமதை முதலியவரை மணந்தார். இவரது பிறப்பைப் புராணங்கள் பல பேதபடக் கூறும் (பக்கம் 1440)

7. யானைத் தலையர்

கஜமுகர்: ஒரு காலத்தில் சிவமூர்த்தியும், பிராட்டியும் நந்தவனத்துச் சித்திர மண்டபத்தில் எழுதி இருந்த ஆண், பெண் யானைகளைப் பார்க்க அவற்றினின்றும் கஜமுகர் தோன்றினார். (பக்கம் 315)

(மேற்கூறிய இரு கருத்துகட்கும் ஆதாரம் ஆ.சிங்காரவேலு முதலியார் தொகுத்த "அபிதான சிந்தாமணி")

Sunday, August 27, 2006

விநாயகர் குறித்து அறிஞர்கள் கருத்து

(தொகுப்பு: குடந்தய் வய்.மு.கும்பலிங்கன்)

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தமிழகப் பக்தப் பிரமுகர்கள் ஆயத்தமாகிக் கொண்டு வருகிறார்கள். விநாயகர் வரலாறு எந்த அளவுக்கு அசிங்கமும், ஆபாசமும், உண்மைக்கு மாறான செய்திகளும் கொண்டது என்பதைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களும், அவர்தம் தொண்டர்களாகிய நாமும் அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலமாகவே ஏட்டிலே எழுதியும், மேடையிலே பேசியும் விளக்கி வருகிறோம் என்றாலும் நாட்டு மக்கள் திருந்தியபாடில்லை. அவர்கள் அறிவு விளக்கமும், தெளிந்த சிந்தனையும் பெற வேண்டி அறிஞர்கள் பலர் நிகழ்த்தியுள்ள விநாயகர் பற்றிய ஆய்வுகளை ஈண்டுத் தொகுத்துத் தருகிறோம். கருத்து வழங்குகின்ற இவர்கள் அனைவரும் தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சுயமரியாதை இயக்கத்திற்குச் சிறிதும் தொடர்பு இல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் ஒருவர் அய்யங்கார் என்பதும், மற்றவர்கள் பழுத்த சைவ சமய அடியார்த் தொண்டர்கள் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.


1. முரண்பட்ட வரலாறு

பிள்ளையார் பற்றிய கதையை விளக்க வேண்டியது அவசியம். இந்த உண்மையை உணர்ந்த பின் பிள்ளையார் கடவுள்தானா? பிள்ளையார் பொம்மையை உடைத்ததனால் பெரியார் அவர்கள் என்ன அடாத செயலைச் செய்துவிட்டார் என்பதைத் தெளிவாக உணர முடியும்.
புராணக் கதைகளில் கணபதியின் பிறப்பே பல்வேறு விதமாகக் கூறப்பட்டுள்ளது. எது உண்மை என்பதை யாரும் கூறமுடியாது. ஆனால், ஒன்று தெளிவு. கற்பனையின் விளைவே கணபதி. கீழ்க்கண்ட பல்வேறு கதைகள் இதைத் தெளிவாக நிரூபிக்கின்றன.
கணபதி பெண் இல்லாமல் ஆணுக்குப் பிறந்தவர் என்றும், இதற்கு நேர் மாறாக ஆண் இல்லாமல் பெண்ணுக்குப் பிறந்தவர் என்றும் கூறப்படுகின்றன. புராணக் கதையில் கணபதியின் பிறப்பு அசிங்கமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. பார்வதி தன் உடல் அழுக்கை உருண்டையாக்கி விளையாடிக்கொண்டிருந்தாளாம். அந்த உருண்டையின் மீது அவள் அன்பு சொரிய அதற்கு உயிர் கொடுத்து அதைத் தன் மகன் என்று அழைத்தாளாம்.

மற்றொரு கதை: கணபதியின் பிறப்பை வேறுவிதமாகச் சித்திரிக்கிறது. பார்வதி தன் உடல் அழுக்கைக் கழுவி அதைக் கங்காநதியின் முகத்துவாரத்தில் உள்ள யானைத் தலை இராட்சசி மாலினியைக் குடிக்க வைத்தாளாம். இதன் விளைவாக மாலினி கர்ப்பம் தரித்த பிறகு ஒரு குழந்தையைப் பெற்றாளாம். அந்தக் குழந்தையைப் பார்வதி எடுத்துச் சென்று விட்டாளாம்.

மேற்கூறிய கதைகள் அனைத்தும் கணபதிக்கு யானைத் தலை ஏன் வந்தது என்பதைத் தெளிவு படுத்த வில்லை. பிரம்மவைவர்த்த புராணத்தில் ஒரு கதை கூறப் பட்டுள்ளது. கணபதி பிறந்த நேரத்தில் சனி பார்வை தோஷத்தால் தலை இல்லாமல் பிறந்தாராம். கணபதியின் தாய் தன் குழந்தைக்குத் தலை இல்லையே என்று தேம்பித் தேம்பி அழ விஷ்ணு பகவான் ஒரு யானைத் தலையை ஒட்ட வைத்தாராம். ஆனால், °கந்த புராணம் இதை மறுக்கிறது. கணபதி தன் தாயின் வயிற்றில் இருந்தபோது சிந்தூரா என்ற இராட்சசி வயிற்றுக்குள் புகுந்து குழந்தையின் தலையைக் கடித்துத் தின்று விட்டாளாம். பிறந்த குழந்தைக்குத் தலை இல்லாமல் போகவே அக்குழந்தை யானைத் தலை கொண்ட கஜாசுரன் என்ற இராட்சன் தலையை வெட்டித் தன் கழுத்தில் ஒட்ட வைத்துக் கொண்டதாம். தலையும் கண்ணும் இல்லாத இக்குழந்தை தனக்குத் தலை இல்லையென்பதை எங்ஙனம் உணர்ந்தது. கஜாசுரனின் தலையை எப்படி வெட்டித் தன் கழுத்தில் ஒட்ட வைத்துக் கொண்டது என்பதை °கந்த புராணம் தெளிவுபடுத்தவில்லை.

"சுப்ரபேத ஆகமம்" என்ற நூல் கூறுவதாவது; சிவனும், பார்வதியும் யானைகளைப் போல் சம்போகம் செய்தார்களாம். இதன் விளைவாகப் பிறந்தது யானைத் தலைக் குழந்தையாம்.
(ஏ.எ°.கே. அய்யங்கார் எழுதிய, "பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா." என்ற நூலின் பக்கம் 36, 40, 41, 42)

2. விநாயகர் இடைக்கால வரவே!

அறிஞர்கள் சிலர் சங்க இலக்கியத்தில் விநாயகரைப் பற்றிய குறிப்பு காணப்படாததால் இடைக்காலத்தில் வந்த வழிபாடு விநாயகர் வணக்கம் என்பர். முதலாம் நரசிம்மவர்மன் தானைத் தலைவராகிய பரஞ்சோதியார் என்னும் சிவத்தொண்டர் இரண்டாம் புலிகேசியை வென்று அவன் தலை நகராகிய வாதாபியிலிருந்து எடுத்து வந்த கணபதியின் திருவுருவச் சிலையைத் திருச்செங்காட்டாங்குடியில் எழுந்தருளச் செய்தார் என்பர். இது உண்மைதான்.
ஞானசம்பந்தரும், "பொடி நுகரும் சிறுத் தொண்டர்கருள் செய்யும் பொருட்டாக கடி நகராய் வீற்றிருந்தான் கணபதிச் சரத்தானே" என்று பாடுகிறார்.
(டாக்டர் சோ.ந.கந்தசாமி, தமிழ்த்துணைப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் "ஞான விநாயகர்" என்னும் கட்டுரையில்+ பக்கம் 20)

3. பண்டை இலக்கியத்தில் விநாயகர் இல்லை

நம் தமிழ்நாட்டில் பண்டைத் தமிழ் நூல்களில் இவ்விநாயகர் வழிபாடு சொல்லப்படவில்லை. திருஞான சம்பந்தர் தன் தேவாரத்தில் விநாயகர் வழிபாட்டைப் பற்றிக் கூறியுள்ளார். உமையம்மை பெண் யானையின் வடிவு கொள்ளச் சிவபிரான் ஆண் யானை வடிவு கொண்டு யானை முகத்தை உடைய கணபதியைத் தோற்றுவித்தான் என்கிறார். சிறுத்தொண்டர் பரஞ்சோதி என்ற பெயரோடு வட பகுதியில் வாதாபி என்ற நகர் மேல் படையெடுத்துச் சென்று அந்நகரை அழித்து வெற்றி கொண்டு வந்தபோது அங்கு சிறப்பாகக் காணப்பட்ட கணபதியின் படிமத்தையும் கொண்டு வந்து தம்மூரில் கணபதீச்சுரம் செய்து வழிபட்டார் என்பதும், வாதாபி யிலிருந்து கொணர்ந்தமையால் வாதாபி கணபதி எனப் பெயர் பெற்றார் என்பதும் இங்கு நினைவு கூர்தல் வேண்டும்.

(தமிழாகரர் வித்துவான் செ. வெங்கடராமச் செட்டியார், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், "தன்னை நினையத் தருகிறான்" என்ற கட்டுரையில் பக்கம் 17)
(மேல் இரு கருத்துகளுக்கும் ஆதார நூல்: சிதம்பரம் முக்குறுணி விநாயகர் திருக்கடமுழுக்கு விழா மலர் 8+9+1978)

4. சிவனுக்குப் புதிய உறவு

பாடல் பெற்ற கோயில்களில் நாயன்மார் காலத்தில் விநாயகரை வைத்து வழிபட்டதாகத் தெரியவில்லை. விநாயகர் தமிழகத்துத் தெய்வம் அல்லர். முருகன் சங்க நூல்களில் இடம் பெற்றிருப்பது போல விநாயகர் இடம் பெறவில்லை. விநாயகர் வழிபாடு பம்பாய் மாகாணத்தில்தான் மிகுதியாகக் காணப்படுகிறது. அம்மாகாணம் பல்லவர் காலத்தில் பண்டைச் சாளுக்கியரால் ஆளப்பட்டு வந்தது. சிறுத் தொண்ட நாயனார் சாளுக்கியர் தலை நகரான வாதாபியைக் கைப்பற்றியபோது இப்புதிய கடவுளை அங்கு கண்டார். தாம் முன்னர் கண்டறியாத அத்திருவுருவத்தைக் கண்டதும் வியப்புற்று அதனை எடுத்து வந்து தம் ஊரில் சீராளதேவன் கோயிலில் வைத்து வழிபடலானார். அது முதல் சீராளன் கோயில் கணபதீச்சுரம் எனப் பெயர் பெற்றது என்பதே தெரிகிறது. இக்கணபதீச்சுவரமே சம்பந்தர் பாடல்களில் இடம் பெற்றது. பின்னர் நாளடைவில் இப்புதிய கடவுளுக்கும், சிவபெருமானுக்கும் உறவுமுறை கற்பிக்கப்பட்டது. அதன் பயனாக விநாயகர் சிவபெருமானுக்கு முதல் திருமகனாராகக் கருதப்பட்டார். இவ்விநாயகர் வாதாபியிலிருந்து குடியேறிய தெய்வம் என்பதை 'வாதாபி கணபதி பஜேம் பஜேம்' என்ற தோத்திரத்தாலும் நன்குணரலாம்.
(சைவப் பெரும்புலவர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் எழுதிய "சைவ சமயம்" என்ற நூலில் பக்கம் 62)

5 ஆம் நூற்றாண்டில் விநாயகர்

வடமொழியில் புராண நூல்கள் இயற்றினவர், இழிந்த மக்களின் நடையைக் காட்டிலும் அருவருக்கத்தக்கச் செய்திகளைப் பொய்யாகப் பிணைத்துக் கட்டிச் சிவபிரான் மேலும் உமைப் பிராட்டியார் மேலும் அவை தம்மை ஏற்றி யானை முகம் உடைய பிள்ளையார் அவ்விருவர் பால் நின்று தோன்றிய வரலாறுகளைப் பலவாறு ஒன்றோடொன்று மாறுபடப் பகர்ந்திருக்கின்றனர்.
யானை முகம் உடைய பிள்ளையாராகிய கடவுள் வணக்கம் கி.பி. 5ஆம் நூற்றாண்டின் ஈற்றிலாதல் 6ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலாதல் தோன்றியதாகல் வேண்டும்.
(மறைமலைஅடிகள் எழுதிய "தமிழர் மதம்" என்ற நூலில்+ பக்கம் 190)

6. விநாயகரின் மனைவியர் பட்டியல்

விநாயகர் தன்னை வணங்கியவர்க்கு விக்கினத்தை நீக்குவோரும், அவ்வகை வணங்காதவர் க்ரு விக்கினத்தைத் தருபவரும் ஆவார். இவர் சித்தி, புத்தி, வல்லபை, விஷ்ணு மூர்த்தியின் குமாரிகளாகிய மோதை, பிரமோதை, சுமகை, சுந்தரி, மனோரமை, மங்கலை, கேசினி, காந்தை, சாருகாசை, சுமத்திமை, நந்தினி, காமதை முதலியவரை மணந்தார். இவரது பிறப்பைப் புராணங்கள் பல பேதபடக் கூறும் (பக்கம் 1440)

7. யானைத் தலையர்.

கஜமுகர்: ஒரு காலத்தில் சிவமூர்த்தியும், பிராட்டியும் நந்தவனத்துச் சித்திர மண்டபத்தில் எழுதி இருந்த ஆண், பெண் யானைகளைப் பார்க்க அவற்றினின்றும் கஜமுகர் தோன்றினார். (பக்கம் 315)

(மேற்கூறிய இரு கருத்துகட்கும் ஆதாரம் ஆ.சிங்காரவேலு முதலியார் தொகுத்த "அபிதான சிந்தாமணி")

Friday, July 07, 2006

பெண்கள் சாமியைத் தொட்டால் தோசம்

‘‘சபரிமலை ஐயப்பன் சன்னதியில் அநியாயம் நடக்கிறது’’ என்று, கடந்த 29.06.06 இதழில் நமக்குப் பேட்டியளித்திருந்தார் உன்னிகிருஷ்ண பணிக்கர். ஐயப்பன் கோயிலில் நடந்த சில அபசகுன நிகழ்வுகளைத் தொடர்ந்து, தான் நடத்திய தேவப்பிரசன்னத்தில் கண்டறிந்த பல விஷயங்களில், ஐயப்பனை வயதுப் பெண்கள் சிலர் தரிசித்தது பற்றியும் அப்பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் பணிக்கர்.

அதன் பிறகு, இந்த விஷயங்கள் மாநிலம் தாண்டி பல பத்திரிகைகளிலும் விரிவாக வெளியானபோதுதான், ‘அப்படி ஐயப்பனைத் தரிசித்தது நான்தான்... ஐயப்பன் சிலையை நான் தொடவும் நேர்ந்தது’ என்று சொல்லி, தற்போது பூதாகரமாகியுள்ள பிரச்னைக்குப் பிள்ளையார் சுழி போட்டார் கன்னட நடிகையும், தயாரிப்பாளருமான ஜெயமாலா.

‘1987_ல் எனக்கு 27 வயது. அப்போது நானும் எனது (முன்னாள்) கணவரும் ஐயப்பனைத் தரிசிக்க சபரிமலை போயிருந்தோம். எங்களை அடையாளம் கண்ட கோவில் நிர்வாகிகள் சிலர், வி.ஐ.பி. வாசல் வழியாக ஐயப்பன் சன்னிதானத்திற்குள் எங்களை அழைத்துச் சென்றார்கள். அப்போது ஏற்பட்ட திடீர் நெரிசலில் நான் சாமி சிலை அருகே விழுந்தேன். அந்த நேரத்தில்தான் சிலையை நான் தொட நேர்ந்தது. இத்தனை ஆண்டுகளாக அதை நான் தவறு என்று நினைக்கவில்லை. சாமி கோபத்தில் இருக்கிறார் என்று தகவல் வெளியானதால் நடந்ததை விவரித்து தேவசம் போர்டுக்குக் கடிதம் எழுதினேன்’ என்று ஜெயமாலா தினசரி சொல்லி வந்தார்.

‘நம்பினார் கெடுவதில்லை’ பட ஷ¨ட்டிங்கின்போது சபரிமலைக்குப் பெண்கள் போகக் கூடாத பகுதியில் நின்று நடனம் ஆடினேன்’ என்று நடிகை சுதாசந்திரனும் சொல்ல, பரபரப்பு கூடியது. கேரளாவிலிருந்து இதற்குக் கடும் எதிர்ப்புக்குரல்! ‘ஐயப்பன் சிலையைத் தொட்டிருக்கவே முடியாது. இதில் ஏதோ சதி இருக்கிறது...’என்று அம்மாநில அமைச்சர் தொடங்கி, ஜோதிடர்கள் வரை கொதித்தெழுந்தார்கள்.

ஜெயமாலா அப்படி ஒரு கடிதத்தை தேவசம் போர்டுக்கு எழுதினாரா இல்லையா என்பதிலேயே தேவசம் போர்டுக்குள் இரு வேறு கருத்துக்கள் எழுந்தன. தந்திரி, மேல்சாந்தி, தேவசம் போர்டு நிர்வாகிகள் என எல்லோரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் நடிகை ஜெயமாலாவிடம் பேசினோம். தன் மீது ஏவப்படும் எதிர் விமர்சனங்களில் கலங்கிப் போனவராக நொந்தபடியே பேசினார் ஜெயமாலா. ‘‘நடந்த உண்மையை மனசாட்சி உறுத்தியதால் கடிதமாக எழுதி அனுப்பி வைத்தேன். இடைப்பட்ட காலத்தில் என் வீட்டில் நடந்த அஸ்தமங்கல பூஜையின்போது, எனக்கு சாமி சிலையைத் தொட்ட தோஷம் இருப்பதாக ஒரு சாமியார் சொன்னார். அதனால்தான் நான் மன்னிப்புக் கேட்டுக் கடிதம் எழுதினேன். இப்போது விளம்பரத்திற்காக நான் இதைச் சொல்வதாக விமர்சிக்கிறார்கள். சதி செய்வதாகவும் சொல்லி என்னைக் காயப்படுத்துகிறார்கள். நான் விளம்பரம் தேடுபவளாக இருந்தால், ‘எனது கடித விஷயத்தை ரகசியமாக வைத்திருங்கள். கடிதத்தைப் பின்பு அழித்து விடுங்கள்’ என்று தேவசம் போர்டுக்குச் சொல்லி இருப்பேனா? எனது கடித விவகாரத்தை வெளியில் சொல்லி பிரச்னையை ஏற்படுத்தியது அவர்கள்தான். போதும் போதும்... சாமி விவகாரத்தில் இதற்கு மேல் நான் எதுவும் சொல்லப் போவதில்லை. விசாரணையோ, சட்ட நடவடிக்கையோ... எதையும் நான் எதிர்கொள்வேன். ஐயப்பன் எனக்குத் துணையிருப்பார்’’, என்று சொல்லி முடித்துக் கொண்டார் ஜெயமாலா.

சர்ச்சை அதோடு ஓயவில்லை.. ‘Êஜெயமாலாவைக் கைது செய்யவேண்டும். அவரைத் தூண்டிவிட்ட பணிக்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்ற குரல்கள் இன்னும் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. பணிக்கர் பார்த்த தேவபிரசன்னத்தையே ரத்து செய்து விட்டு வேறு பிரசன்னம் பார்க்க வேண்டும் என்றும் சில கேரள ஜோதிடர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

உன்னிகிருஷ்ண பணிக்கரிடமே அவர் மீதான விமர்சனங்களைச் சொல்லி விளக்கம் கேட்டோம். ‘‘நான் உங்களுக்கு அளித்த பேட்டியின் போதே சொன்னேன். இந்த தேவ பிரசன்னம் நிகழ்ச்சியை நடத்த நான் ஆர்வம் காட்டவில்லை. நானாக முன் செல்லவும் இல்லை. தேவசம் போர்டு தலைவர் மற்றும் அதிகாரிகள்தான் என்னிடம் வேண்டிக்கொண்டார்கள். அதன்படியே பிரசன்ன நிகழ்ச்சி நடந்தது.

அதில் ஒரு விஷயமாக ‘அனுமதிக்கப்படாத வயதுடைய (11_49) சில பெண்கள் ஐயப்பனைத் தரிசித்திருக்கிறார்கள். இதில் சாமி கோபத்தில் இருக்கிறார்’ என்றுதான் சொன்னேன். நடிகை என்றோ வி.ஐ.பி. என்றோ நான் யாரையும் பெயர் சொல்லிக் குறிப்பிடவில்லை.

இந்த விஷயங்களைக் கேள்விப்பட்டு, யாரோ ஒரு நடிகை தானாகவே முன் வந்து, தான் தரிசித்ததைச் சொன்னால், அதை எதிர்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டியது தேவசம் போர்டுதான். இதில் எனக்கு என்ன பங்கு இருக்கிறது? சதி செய்ய என்ன அவசியம் இருக்கிறது?

சரிந்துபோன என் புகழைச் சரி செய்யத்தான் நான் தேவ பிரசன்னம் நிகழ்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டேன் என்பதை மறுக்கிறேன். தேவ பிரசன்னத்தின் புனிதத்தன்மை புரியாதவர்கள் இப்படிப் பொய்ப்பிரச்சாரம் செய்கிறார்கள்.

அவர்கள் அழைப்பின் பேரில் சென்று பிரசன்னம் பார்த்து, அதன் மூலம் எனக்குத் தெரிந்த குறைகளைச் சுட்டிக் காட்டியதுடன் என் பணி முடிந்தது.இதை ஏற்பதும் ஏற்காததும் அவர்கள் இஷ்டம்.

பிரசன்னத்தில் வந்த குறைபாடுகளில் இங்கு வரும் பக்தர்களுக்குச் சரியான உணவு இன்றி அவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பதும் ஒன்று. இதையடுத்து நான் என் தொடர்பு மூலமாக ஒரு டிரஸ்ட்டின் உதவியை நாடி விசேஷ நாட்களில் எத்தனை பக்தர்கள் வந்தாலும் அவ்வளவு பேருக்கும் இலவச உணவு அளிக்கும் ஏற்பாட்டைச் செய்திருக்கிறேன். என் மீது விமர்சனம் செய்பவர்கள் ஒரு பத்துப் பேருக்காவது உணவு போடுவார்களா? மாட்டார்கள். என் மீது இப்படி விமர்சனங்கள் வர காரணமாக உள்ள ஒரு டி.வி.சேனலும் அவர்களின் பத்திரிகையும் நான்கு பேருக்காவது உணவளிப்பார்களா? ஒருக்காலும் செய்ய மாட்டார்கள்!’’ என்று ஆவேசப்பட்ட பணிக்கர், ‘‘ஆக நான் எனது கருத்துக்களில் உறுதியாக இருக்கிறேன். வீணான இந்தச் சர்ச்சைகளால் ஐயப்பனின் புனிதத்தன்மை எந்த வகையிலும் கெடவில்லை என்பதுதான் ஆறுதலான விஷயம்’’, என்று சொல்லி ஒரு பெருமூச்சு விட்டார்.

இந்தச் சர்ச்சைகளில் இருந்து ஒதுங்காமல் கேரள அரசு இதில் தலையிட வேண்டும் என்று வந்த வேண்டுகோள்களை ஏற்க மறுத்துள்ள அம்மாநில அறநிலையத்துறை அமைச்சர் சுதாகரன், ‘‘ஐயப்பன் கோயில் மூலமாக கேரளாவுக்கு வரும் கணிசமான வருமானத்தைக் கெடுக்க சில மாநில அரசுகள் செய்த சதி’’‘ என்று சொல்லி, பிரச்னையை அடுத்த பரிமாணத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.

அரசியல்வாதிகள் சும்மாயிருப்பார்களா..? ‘இந்துமத உணர்வுகளைப் புண்படுத்த அந்நிய நாடுகள் செய்த சதியாக இருக்கலாம். அதற்கு இங்குள்ள சிலர் உதவியிருக்கலாம். இது பற்றி விசாரணை நடத்த வேண்டும்’ என்று ஒரு புது குண்டை வீசியிருக்கிறது பி.ஜே.பி.

கேரள அரசு இப்பிரச்னையில் தலையிட மறுத்துள்ள நிலையில், அடுத்து என்ன செய்வது என்பதை முடிவு செய்ய வேண்டிய பொறுப்பு தேவசம் போர்டுக்கு வந்துள்ளது. சர்ச்சையின் ஆணிவேரான, சிலையைத் தொட்ட விவகாரம் குறித்து ஜெயமாலாவிடம் விசாரிக்க தேவசம் போர்டின் விஜிலன்ஸ் அதிகாரியான அசோக் குமாரை பெங்களூருக்கு அனுப்பியிருக்கிறது தேவசம் போர்டு. ‘‘அவரது அறிக்கையைப் பெற்று ஜூலை 7_ம் தேதி கூடவுள்ள போர்டு கூட்டத்தில் வைத்து விவாதித்து இறுதி முடிவு எடுப்போம். அதற்கிடையில் பழைய விஷயங்களைப் பேசி சர்ச்சையைத் தொடர விரும்பவில்லை’’ என்று நம்மிடம் சொன்னார் தேவசம் போர்டின் தலைவர் ராமன் நாயர்.

பிரம்மச்சாரி கடவுளான ஐயப்பன் விஷயத்தில் பெண்களை மையப்படுத்தி எழுந்துள்ள இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒட்டுமொத்த நீதி விசாரணைக்கு உத்தரவிட்டு சூழ்நிலையைச் சாந்தப்படுத்த வேண்டும் என்கிறார்கள், ஐயப்ப பக்தர்கள்!

எஸ்.பி.எல்.

நன்றி:
குமுதம் ரிப்போர்ட்டர் 9.7.2006

Monday, May 22, 2006

சாதிச் சண்டையால் கொல்லப்படும் தலித்கள்

பீகாரில் சாதிக் கொலைகள்

இந்தியாவின் கிழக்கு மாநிலமான பீகாரில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் குறைந்தபட்சம் ஒன்பது தலித் மக்களை ஆயுததாரிகள் கொன்றுள்ளனர்.

பீகார் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்திற்குள் சனிக்கிழமையன்று இரவு உட்புகுந்த ஆயுததாரிகள், கண்மூடித்தனமாக துப்பாக்கி சூட்டினை மேற்கொண்டதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் குழந்தைகளும் அடங்குவர்.

இந்தியாவில் மிகவும் சட்டம் ஒழுங்கற்ற பிராந்தியம் என்று கூறப்படும் இப்பகுதியில், தொடர்ந்து நடைபெற்று வரும் ஜாதி மற்றும் சமூக விரோத கும்பல்களின் மோதலின் ஒரு பகுதியே இந்த வன்முறை என அதிகாரிகள் தெரிவித்துள்ளளனர்.

http://hosuronline.com/update/news/tamilnews/read.asp?newsID=1426

பூசாரி ஆக முடியாததால் சிலைகள் உடைப்பு

பூசாரி ஆக முடியாததால் 21 சிலைகளை உடைத்த வாலிபர்

மதுரை அருகே உள்ள கூடக்கோவில் போலீஸ் சரகம் பாறைப்பத்தி எலியார்பத்தி, பெரியகூடக்கோவில், நெடுமதுரை ஆகிய கிராமங்கள் அருகே உள்ள 21 சாமி சிலைகளையும், 3 பீடங்களை யாரோ உடைத்து விட்டு சென்றுவிட்டனர். இதுகுறித்து கூடக்கோவில் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவுசெய்யப்பட்டு விசாரணை செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், இன்ஸ்பெக்டர் பாதமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, ஏட்டுகள் நாகராஜன், ராமு, வீரபாண்டி ஆகியோர் விசாரணை செய்தனர். விசாரணையில் பாறைபத்தியை சேர்ந்த கருப்பசாமி என்ற வைரன் மகன் கிருஷ்ணன் (வயது 27) சாமி சிலைகளை உடைத்தது தெரிய வந்தது.

போலீசார் கிருஷ்ணனை தேடி செங்குன்றாபுரம், நிலக்கோட்டை பகுதிக்கு சென்றனர். போலீசை கண்டதும் தப்பி ஓடிவிட்டான். காரியாபட்டி அருகே உள்ள மந்திரிஓடை பக்கம் கிருஷ்ணன் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் தகவல் கொடுத்த நபர் கூறிய அடையாளத்தை வைத்து மந்திரிஓடைக்கு சென்றனர். அங்குள்ள பஸ் ஸ்டாப்பில் நின்று கிருஷ்ணனை தப்பி ஓடாதபடி சுற்றி வளைத்து பிடித்தனர்.
போலீசில் பிடிபட்ட கிருஷ்ணன் சிலைகளை தனியாக சென்று உடைத்ததாக வாக்குமூலம் கொடுத்தார்.

வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

எனது அப்பா கருப்பசாமி, கருப்பு கோவில் பூசாரி. அவர் இறந்துவிட்டார். பூசாரி அவதற்கு அருள் இறக்கினார்கள். அருள் வரவில்லை. இதனால் பூசாரி ஆகமுடியவில்லை. திருமணம் நடைபெறவில்லை. நான் பலமுறை சாமி கும்பிட்டும் சாமி அருள் இறங்கிவரவில்லை. இதனால் சாமி உதவி செய்யவில்லை. எதுக்கு கல் சிலையா இருக்கு என்று உடைத்தேன். இரவில் தான் சிலைகளை உடைத்தேன். எனக்குத்தான் பாதிப்பு ஏற்பட்டது என்று கூறி உள்ளார்.

சிலைகளை உடைக்கும் முன் அடிக்கடி சாமி சிலைகள் மீது மண்ணை எறிவது, கல்லால் அடித்தும் வந்து இருக்கிறார். ஊர் மக்கள் கண்டித்து உள்ளனர் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

http://hosuronline.com/update/news/tamilnews/read.asp?newsID=1422

Tuesday, February 21, 2006

சந்தன மரம் வெட்டிய 7 போலீஸார் சிக்கினர்

சத்தியமங்கலம், பிப். 20: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப் பகுதியில் சந்தன மரங்களை வெட்டியதாக அதிரடிப் படை சப் - இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் உள்பட 7 போலீஸôர் ஞாயிற்றுக்கிழமை பிடிபட்டனர்.

இது தொடர்பாக, அதிரடிப் படை சப் - இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபிள்கள் 3 பேர், சமையல் உதவியாளர்கள் 3 பேர் ஆகிய 7 பேர் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து வனத்துறையினரும் அதிரடிப்படை தரப்பினரும் தீவிர ஆலோசனை நடத்தினர்.

சத்தியமங்கலம் அரேபாளையம் அருகே கேர்மாளம் செல்லும் வழியில் வனத் துறைக்குச் சொந்தமான காட்டுப் பகுதியில் சந்தன மரங்களை வெட்டிய அதிரடிப் படையினர் அதை வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தபோது பிடிபட்டனர்.

நன்றி:
www.dinamani.com


ஏதோ சந்தனமரம் கடத்தும்போது சிக்கிவிட்டனர். சிக்காத பெண்கடத்தும் போலீஸ், போதை பொருள் கடத்தும் போலீஸ், லஞ்சம் வாங்கும் போலீஸ், கட்டப்பஞ்சாயத்து செய்யும் போலீஸ் எப்பொழுது சிக்குவார்களோ?.

Saturday, November 26, 2005

நெற்றியில் திலகமிட்டுக் கொண்டால்

"இந்த எல்லையைத் தாண்டி இந்து அல்லாதவர்கள் நுழையக் கூடாது" என்று இந்துக் கோயில்கள் சிலவற்றில் கட்டுப்பாடுகள் இருப்பது நாடறிந்த செய்தி. இந்தக் கட்டுப்பாடு இப்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

இந்துவாக மாறி, இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவரை மணமுடித்த அமெரிக்கப் பெண்ணும் அவளின் கணவனும் ஒரிஸாவின் லிங்கராஜ் கோயிலில் நுழைய முயன்றபோது அடித்து விரட்டப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்னை பெரிதாகி ஜனாதிபதி வரை புகார் போயிருக்கிறது.

வட இந்தியாவின் புண்ணிய தலங்களைக் காண கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவிலிருந்து வந்தவர் பமீலா கே ஃபிளிக். 28 வயது இளம் பெண்ணான இவர் வாரணாசியில் தங்கியிருந்தபோது அந்த ஊரைச் சேர்ந்த அனில் யாதவ் என்ற சாஃப்ட்வேர் இன்ஜினீயருடன் காதல் பற்றிக் கொண்டது. இந்துவாக மதம் மாறிய பமீலா, ஏப்ரல் மாதத்தில் இந்து முறைப்படியே அனிலை மணம் புரிந்து கொண்டார்.

தொடர்ந்து இந்தியாவில் தங்கியிருந்த பமீலா, கடந்த மாதம் ஒரிஸா மாநிலத்திலிருக்கும் கோயில்களைக் காண கணவனோடு போயிருக்கிறார். 30 ஆம் தேதியன்று ஒரிஸாவின் தலைநகர் புவனேஸ் வரிலுள்ள புகழ்பெற்ற லிங்கராஜ் கோயிலில் நுழைய முயன்றபோது, பமீலாவும் அனில் யாதவும் பலவந்தமாக தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.

"நீ வேற்று மதத்தைச் சேர்ந்த பெண். இந்து மத கோட்பாடுகளின்படி உன்னை அனுமதிக்க முடியாது. அந்நிய மதத்தைச் சேர்ந்த பெண்ணை மணந்ததால் உன்னையும் அனுமதிக்க முடியாது" என்று திருப்பிவிட்டுள்ளனர் கோயில் ஊழியர்கள் . இதையடுத்து, பமீலா இந்துவாக மதம் மாறியதற்கான சன்றிதழ்களுடன் மறுநாள் கோயிலுக்கு வந்திருக் கிறது அந்த காதல் தம்பதி. அப்போதும் தோல்விதான்.

இதைப்பொறுத்துக் கொள்ளமுடியாத அனில் யாதவ், வாக்குவாதத்தில் இறங்க, பிரச்னை முற்றி அடிதடியாகியிருக்கிறது. இதில் அனில் தாக்கப்பட, கோயில் ஊழியர்கள் தன்னையும் தன் கணவனையும் கண் மூடித்தனமாகத் தாக்கிவிட்டனர் என்று போலீஸுக்குப் போனார் பமீலா. ஆனால், புகாரை வாங்க மறுத்து துரத்திவிட்டது போலீஸ். மறுநாள் இந்தப் பிரச்னை பரபரப்பான செய்தியாக மீடியாக்களில் இடம்பிடிக்க, பதறிப்போன போலீஸார் அதன்பிறகு புகாரைப் பதிவு செய்துள்ளனர். ஆனால் மேற்கொண்டு பெரிதாக எந்த நடவடிக்கையும் இல்லை. அதே போல அந்த தம்பதியால் கோயி லுக்குள்ளும் கடைசி வரை நுழைய முடியவில்லை.

பொங்கி தீர்க்க ஆரம்பித் திருக்கும் பமீலா, "நான் மதம் மாறியதற்காக இப்போது வெட்கப் படுகிறேன். இந்து மதத்துக்கு மாறிய பிறகும் எங்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்ததோடு அதை நியாப்படுத்திப் பேசுகிறார்கள் கோயிலின் நிர்வாகிகள். என் கணவரை திட்டமிட்டு வம்புக்கு இழுத்து தகராறு செய்தனர். முகத்தில் ஒரு குத்துவிட்டு விரட்டி விட்டனர். இந்தப் பிரச்னையை நான் இத்துடன் விடப் போவதில்லை. மதம் மாறிய சான்றிதழ் மற்றும் போட்டோக்களுடன் ஒரிஸா முதல்வருக்கும், ஜனாதிபதி அப்துல் கலாமுக்கும் இமெயில் மூலம் புகார் அனுப்பியிருக்கிறேன்" என ஆவேசத்துடன் பேசுகிறார்.

11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த லிங்கராஜ் கோயில், பூரி நகரிலிருக்கும் ஜெகந்நாத் கோயிலுக்கு அடுத்த படியாக ஒரிஸாவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதன் நிர்வாகிகளில் ஒருவரான ராம்காந்த் மிஸ்ராவிடம் இந்த விவகாரம் பற்றிக் கேட்டால், "நெற்றியில் திலகமிட்டுக் கொண்டால் ஒரு வெளிநாட்டுப் பெண் இந்துவாகிவிட முடியுமா?" என ஆவேசப்பட்டவர், கோயிலின் வாசலில் எழுதி மாட்டப்பட்டுள்ள "இந்துக்கள் அல்லாதவர்களுக்கு கோயிலில் நுழைய அனுமதியில்லை" என்ற போர்டைக் காட்டினார்.

கோயிலின் டிரஸ்டிகளில் ஒருவரான சரேஜ் மிஸ்ரா, "ஒரிஸாவில் முக்தி மண்டபம் என ஒரு அமைப்பு உள்ளது. பூரி சங்கராச் சாரியாரின் தலைமையில் இயங்கும் இந்த அமைப்பு, இது போன்ற விவாகாரங்களை விசாரித்து முடிவெடுக்கிறது. இதில் இந்து மத குருமார்கள் உறுப்பினர்களாக உள்ளனர். மதம் மாறியவர் பற்றி நன்கு விசாரித்து இந்த அமைப்பு ஒரு சான்றிதழ் தரும். இதை வைத்து கோயிலுக்குள் நுழைய அனுமதி கிடைத்து விடும். பிரச்னைக்குரிய தம்பதி இந்த அமைப்புக்கு விண்ணப்பிக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்.

ஒரிஸா மாநில கோயில்களைப் பொறுத்த வரை இது போன்ற விவகாரங்களில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் பூரி சங்கராச்சாரியான சுவாமி நிஷ்ச்சாலனந்த் சரஸ்வதிக்குதான் உண்டு. அவரிடம் நிருபர்கள் இந்த விஷயம் பற்றிக் கேட்டபோது, "வேற்று மதத்தைச் சேர்ந்த ஒருவர் இந்துவாக மதம் மாறி, ஒரு இந்துவை மணம் புரிந்தால் அவரை இந்துவாக ஏற்றுக் கொள்வதில் எந்த தடையும் இருக்கக் கூடாது. ஆனால், கோயில் வழிபாடுகளில் இவருக்கான உரிமைகள் மாறுபடுகிறது. இந்து சனாதன தர்மத்தின்படி கோயில் வழிபாடுகள் வர்ணாசிரமத்துக்கு அல்லது சாதியின் பிரிவுக்கு ஏற்ப அமைந்துள்ளன. வேற்று மதத்திலிருந்து இந்துவாக மதம் மாறியவர்கள் வர்ணாசிரம தர்மத்துக்கு அப்பாற்பட்டவர்கள். எனவே வழிபாடு பற்றிய உரிமைகள் அவர்களுக்குப் பொருந்தாது.

யார் வேண்டுமானாலும் இந்து மதத்துக்கு மாற லாம். ஆனால், தான் எந்தத் தரமான இந்து என் பதை அவர்கள் முடிவு செய்து கொள்ள வேண்டும். உலகின் எல்லா மதங்களிலும் விதிகளும் வரைமுறை களும் உள்ளன. இந்து கடவுள்கள் மீது உண்மையான பக்தியும் நம்பிக்கை யும் ஒருவன் கொண்டிருப்பானே யானால், தன் மீது விதிக்கப்படும் இந்த விதிகளையும், வரைமுறைகளையும் மனமுவந்து பின்பற்ற வேண்டும்" என விளக்கம் கொடுத்துள்ளார்.

ஒரிஸாவில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய இந்துக்களை மீண்டும் பழைய மதத்துக்கு மாற்றும் முயற்சியை விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் போன்ற அமைப்புகள் செய்து வருகின்றன. இந்நிலையில் லிங்கராஜ் கோயில் சம்பவம், பழையபடி இந்து மதத்துக்கு திரும்புபவர்களை யோசிக்க வைத்துள்ளது. இதையடுத்து இந்த அமைப்பினரையும் இந்த விஷயம் வருத்தமடைய வைத்துள்ளது.

வி.ஹெச்.பி - யின் தலைமை நிலையச் செயலாளர் சரத்சர்மா இது பற்றி பேசும்போது, ஒருவர் இந்து மதத்துக்கு மாறிய பிறகு அவரை கோயிலுக்குள் விட முடியாது எனக் கூறுவது மிகவும் தவறான கருத்தாகும். இவர்களுக்கு என தனி சட்டம் எந்த வேத நூல்களிலும் எழுதப்படவில்லை. இப்படிப் பட்ட விதிமுறைகளை இவர்கள் எங்கு இருந்து பிடித்தார்கள் என்று தெரியவில்லை.

அதே சமயம் வெளிநாட்டவர்கள் சிலர் இங்கு வரும்போது வேறு நோக்கத்துடன் மதம் மாறி, பிறகு தங்கள் நாட்டுக்கு திரும்பிய பிறகு பழையபடி வாழத் துவங்கி விடுகிறார்கள். இதில் பமீலா எந்த வகையில் சேர்வார் என்று தெரியவில்லை என்று சொன்னவர்,

"எது எப்படியோ, ஆனால் பழையபடி இந்து மதத்துக்கு திரும்புபவர்கள் இந்தப் பிரச்னை காரணமாக பயந்து பின்வாங்க மாட்டார்கள்" என்று முடித்தார்.

இதே போன்றதொரு விவகாரம் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது வெடித்தது. அதில் சிக்கியவர் இந்திராதான். பூரி ஜெகந்நாத் கோயிலுக்கு அவர் வந்தபோது, "பார்சி இனத்தைச் சேர்ந்த பெரோஸ் காந்தியை மணமுடித்த காரணத்தால் உங்களை உள்ளே அனுமதிக்க முடியாது" என்று கோயிலில் இருந்தவர்கள் கடுமையாக எதிர்ப்புக் காட்ட, வேறு வழியின்றி இந்திரா திரும்பிச் செல்ல வேண்டியதாகி விட்டது. ஆனால், இதையட்டி பெரிய சர்ச்சை அப்போது உருவானது.

பமீலா சம்பவத்தின் மூலம் இந்திரா காந்தி விவகாரம் பலருடைய நினைவிலும் நிழலாட ஆரம்பித்துள்ளது. மத்தியிலிருப்பது காங்கிரஸ் அரசு என்பதால் இந்த விஷயத்தில் அவர்கள் என்ன மாதிரியான முடிவை எடுக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது.

நன்றி:- ஆனந்த விகடன் நவம்பர் 23, 2005