Tuesday, November 30, 2004

குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாது

"ஜெயலலிதா எப்போதும் இந்துக்களின் பாதுகாவலராக இருந்ததில்லை" என்ற தலைப்பில் குமுதம் ரிப்போர்ட்டிரில் வெளிவந்த திரு பொன். ராதாகிருஷ்ணன் அவர்களின் பேட்டி.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்
http://kumudam.com/reporter/mainpage.php

முதல்முறையாக தமிழக பி.ஜே.பி. மேடைகளில் தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய இருபெரும் திராவிடக்கட்சிகளுமே கடுமையாக வறுபடத் தொடங்கியிருக்கின்றன. காரணம், சங்கராச்சாரியார் கைது விவகாரம்தான். மாறியிருக்கும் இந்தப் புதிய சூழ்நிலையில் தமிழக பி.ஜே.பி. தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணனைச் சந்தித்து சில கேள்விகளை முன் வைத்தோம்.

‘சட்டத்தின் முன்பு எல்லோரும் சமம்’ என்கிறபோது, சங்கராச்சாரியார் கைதுக்காக பி.ஜே.பி. இவ்வளவு ஆக்ரோஷப்படுவது சரியா?
‘‘சங்கராச்சாரியார் கைதை நாங்கள் தேசத்தின் தன்மானப் பிரச்னையாக எடுத்துக் கொண்டிருக்கிறோம். நூறு கோடி மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான பெரியவர் அவர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவரை, ஒரு குற்றவாளியைப் போல் நடத்துவது முறையா? நாளை அவர் மீதான புகார்கள் பொய்யென நிரூபணமாகும்போது, அவருக்கு இழைக்கப்பட்ட அவமானங்களை இந்த அரசால் முழுமையாகக் களைய முடியுமா? என்பதே எங்கள் கேள்வி.’’

சட்டரீதியான இந்தப் பிரச்னையை சட்டரீதியாகவே எதிர்கொள்வதுதானே முறை?
‘‘சட்டபூர்வம் என்பது அவர் மீது போடப்பட்டிருக்கும் வழக்கு. அதை சட்டரீதியாகத்தான் எதிர்கொண்டு வருகிறார். அதேசமயம் அவரது அடிப்படை உரிமைகள் மறுக்கப்படக்கூடாது அல்லவா?

அரசியல்வாதிகளுக்கு சிறையில் கேட்டதெல்லாம் கிடைக்கிறது. பல சிறைகளே பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. ஆனால், காஞ்சி சுவாமிகளுக்குக் கழிப்பறை வசதிகூட செய்து கொடுக்க மறுக்கிறார்கள். ஒரு சட்டியைத் தூக்கிக் கொடுக்கிறார்களாம். இது எவ்வளவு பெரிய அவலம்? எமர்ஜென்சி காலத்தில் கூட கைது செய்யப்பட்ட பல தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு மரியாதையாக நடத்தப்பட்டார்கள். இப்போது அதைவிட மோசமாக நடக்கிறது.’’

அப்படியானால் ‘பி.ஜே.பி., சங்கராச்சாரியார் கைதைக் கண்டிக்கவில்லை; அவர் நடத்தப்படும் விதத்தைத்தான் எதிர்க்கிறது’ என எடுத்துக்கொள்ளலாமா?
‘‘கைது நடவடிக்கையே தவிர்க்கப்பட்டிருக்கவேண்டும் என்பதுதான் எங்கள் நிலை. அவர்தான் எப்போதும் விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக இருந்தாரே!’’

இந்த விவகாரத்தில் இந்துத்வா அமைப்புகள் நடத்தும் பந்த் உள்ளிட்ட போராட்டங்களுக்கு பொதுமக்களின் ஆதரவு கிடைத்ததாகத் தெரியவில்லையே?‘‘
தமிழகத்தைப் பொறுத்தவரை மாநாடு, ஆர்ப்பாட்டம் போன்றவற்றிற்கு பி.ஜே.பி. ஏற்பாடு செய்திருந்ததால் பந்த் கடைப்பிடிக்கப்படவில்லை. மேலும், குறிப்பிட்ட அந்த நாளில் அத்வானி தமிழகத்திற்கு வந்திருந்தார். எனவே அன்று எப்படி பந்த் நடத்த முடியும்? ஆனால், தேசிய அளவில் ‘பந்த்’க்கு குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்கவே செய்தது.’’

சரி.. சங்கராச்சாரியார் கைதுக்காகப் போராடும் இந்து அமைப்புகள் சங்கர்ராமன் கொலைக்காக என்ன செய்தன?
‘‘சங்கர்ராமன் கொலையில் சம்பந்தப்பட்ட உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. அந்தக் கொலையைக் கண்டித்து அப்போதே இந்து அமைப்புகள் அறிக்கை விட்டிருக்கின்றன. அதேசமயம், தேசமே மதிக்கும் ஒரு பெரியவரை அவமானப்படுத்துவது என்பது சீரியஸான விஷயம்.’’

இப்போது ஜெயலலிதாவைத் தாக்கித்தள்ளும் இதே இந்து அமைப்புகள்தானே அண்மைக்காலம்வரை அவரை மோடிக்கு இணையாக வைத்துப் போற்றிக் கொண்டாடின?
‘‘சிலர் அப்படிப் பேசியிருக்கலாம். உண்மையில் ஜெயலலிதா எப்போதுமே இந்துக்களின் பாதுகாவலராக இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால், திராவிடக் கட்சிகள் எதுவுமே இந்துக்களுக்கு அனுசரணையான கட்சிகள் அல்ல. அந்தந்தத் தேர்தல்களுக்குத் தகுந்தாற்போல் ஜாதி, மத பிரச்னைகளைக் கிளறிவிட்டு ஆதாயம் தேடுவதுதான் திராவிடப் பாரம்பரியம். ஜெயலலிதா மதமாற்ற தடைச்சட்டத்தைக் கொண்டு வந்தாரென்றால், அதற்குக் காரணம் மக்களிடையே பி.ஜே.பி. உள்ளிட்ட அமைப்புகள் உருவாக்கி வைத்திருந்த விழிப்புணர்வுதான்.’’

சங்கராச்சாரியார் விவகாரத்தில் கலைஞர் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறதே?
‘‘கலைஞர் தனது வாக்கு சாதுர்யத்தால் ‘வாக்குகள்’ வாங்கும் நோக்கோடு பேசிக்கொண்டிருக்கிறார். உண்மையில் அவர் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. ‘இரண்டு மாதங்களுக்கு முன்பே சங்கராச்சாரியாரைக் கைது செய்திருக்கலாமே? அதுவரை வேறு ஏதேனும் பேரம் நடந்ததா?’ என்றெல்லாம்தான் தனக்கேயுரிய பாணியில் அவர் கேட்கிறார். எனவே, அவரது பேச்சு ஏமாற்று வேலை. மேலெழுந்த வாரியாக அதைப் பார்ப்பவர்கள் ஏமாந்து போவார்கள்.’’

தமிழக அரசியலில் பி.ஜே.பி. இப்போது தனிமைப்படுத்தப்பட்டது போல் உணர்கிறீர்களா?
‘‘இல்லை. மக்களோடு நாங்கள் ஐக்கியப்பட்டிருக்கிறோம்.’’

சங்கராச்சாரியார் விவகாரம் எதிர்கால தமிழக அரசியலை எந்த அளவுக்குப் பாதிக்கும் என நினைக்கிறீர்கள்?
‘‘பி.ஜே.பி. ஆதரவு இல்லாமல் இங்கே யாரும் ஆட்சியமைக்க முடியாது என்ற நிலையை உருவாக்கும்.’’
_______________________________________________
Related news links
http://dinakaran.com/daily/2004/Nov/30/others/topstory5.html
http://dinakaran.com/daily/2004/Nov/30/others/topstory4.html
http://dinakaran.com/daily/2004/Nov/30/others/topstory0.html
http://www.dinakaran.com/daily/2004/Nov/30/flash/flasnews0.html
http://www.thatstamil.com/news/2004/11/30/cancer.html
http://arunviews.blogspot.com/2004/11/blog-post_30.html




Monday, November 29, 2004

ஐயோ கடவுளே! எனக்கு என்னாச்சு?

மனையுடன் முதல்முதலாக கூடும்போது சிலருக்கு தர்மசங்கடமான நிலை உண்டாகலாம். முன் அனுபவமில்லாத நம்மாளுக்கு புதுமனைவியை திருப்திபடுத்தவேண்டுமே, (இல்லையென்றால்) நம்மை ஆண்மையில்லாதவன் என்று நினைப்பாளே போன்ற எண்ண ஓட்டம் ஏற்படுத்தும் பதட்டத்தினால் ஆணின் விறைப்புதன்மை மட்டுதலாக காணப்படும். இதில் நமது அண்ணிகள் வேறு, "டேய் கொழுந்தா! உங்கண்னே போல தூங்கிடாதே! இன்னிக்கு மட்டும் ஒன்றும் நடக்கலேன்னு எனக்கு தெரிய வந்தா அப்புறம் நடக்கறதே வேற", என்று பற்களை கடித்துக்கொண்டு மிரட்டியது ஞாபகத்திற்கு வரும்.

ஐயோ உன் மானம் கப்பலேறப்போகிறதே என்று நம்ம Male kind, மீண்டும் மீண்டும் ட்ரை பண்ணுவார். ம்ஹும். ஒன்றும் ஒத்து வரவேயில்லை. தலையில் கைவைத்துக்கொண்டு என் சோக கதையை கேளு தாய் குலமே! அட தாய்குலமே! என்று மனதுக்குள் புலம்பும் நேரத்தில் எப்போதே தினதந்தியில் பார்த்த "உங்களுக்கு ஆண்மை குறைவா! கவலை வேண்டாம். இவரின் அப்பா, அப்பப்பா, பெரியப்பா, சித்தப்பா, தாத்தா, பாட்டனார் எல்லாரும் இதே டாக்டர் தொழில் செய்து (குலதொழில் போலும்) சென்சுரி அடித்ததோடு நிற்காமல் மாதம் அனைத்து தேதிகளிலும் ஒவ்வொரு டவுனாக வந்து மருத்துவம் பார்க்கிறார். பிரதி 29-ந் தேதி மயிலாடுதுறை காளியாகுடி லாட்ஜிக்கு விஜயம் செய்யப்போகிறார், 30-ந்தேதி சிதம்பரம் போகப்போகிறார் பராக்! பராக்!" என்ற அரை பக்க விளம்பரம் ஞாபகத்திற்கு வரும்.

தலையில் துண்டைப்போட்டுக்கொண்டு யாருக்கும் தெரியாமல் அவரைப் போய் பார்த்து ஆயிரம் ரூபாயிக்கு அவர் கொடுத்த மாத்திரை மருந்துகள் வாங்கி சாப்பிட்ட பிறகு இரண்டு நாளில் விஷயம் சரியாகிவிடும். இதற்கு காரணம் அந்த டாக்டர்தான் என்று நினைத்துக்கொள்வார். (இதில் ஸ்பெஷல் பேக்கேஜ் மெடிஸன் தேவை என்றால் ஐந்து ஆயிரம்). ஒரு ஆண் தன்னை ஆண்மையற்றவன் என்று சொல்வதை தாங்கிக்கொள்ள மாட்டான். அதனை பெறுவதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் ரகசியமாக செலவு செய்வான் என்ற மனித பலவீனம் தெரிந்து செய்யும் வியாபாரம் இது. யாரும் இவர்களிடம் ஏமாந்துவிடாதீர்கள்.

உங்களுக்கு தெரியுமா? வயாகரா போன்ற மாத்திரைகள் ஏற்படுத்தும் கில்மா-க்கள் மனது சம்பத்தப்பட்ட விஷயம் என்பதை தெரிவிப்பதற்காக, மாத்திரை தயாரிக்க உதவும் டியூப்களில் அரிசி மாவை அடைத்து "வயகராவெல்லாம் சும்மா. இது வயகராவின் அம்மா" என்று 100 பேருக்கு கொடுத்து டெஸ்ட் செய்தபோது, மூன்றில் இரண்டுபகுதியினர் மாத்திரை சூப்பராக வொர்க்அவுட் ஆனது என்றார்களாம்.

முதலில் ஒன்றை தெரிந்துக்கொள்ள வேண்டும். பத்திரிகையில் சினிமா நடிகையின் கவர்ச்சி விளம்பரத்தை பார்த்தவுடன் ஏற்படுகின்ற கிளுகிளுப்பு திருமணம் ஆனபுதிதில் உங்கள் மனைவியுடன் இருக்கும்போது வராது. காரணம் மேற்சொன்ன பதட்டமே தவிர வேறொன்றும் இல்லை. மனது பதட்டம் இல்லாமல் இருந்தால் எல்லாம் சரியாகிவிடும். யு அல்ரெடி ஃபிட் ஃபார் செக்ஸ்.

Sunday, November 28, 2004

முதலிரவு டிப்ஸ் - 2

சாந்திமுகூர்த்தத்தை 2 நாள் தள்ளிவைத்துவிட்டு ஒருவரையொருவர் புரிந்துக்கொள்ள முயலலாம். இளமனைவியின் பிஞ்சு விரல்களுடன் உங்கள் விரல்களை கோர்த்து நடந்து செல்லுங்கள். விரல்களுக்கிடையில் ஓராயிரம் வால்ட்ஸ் மின்சாரம் பாயும். சாந்திமுகூர்த்தத்திற்கு பின் எத்தனை வாட்ஸ் என்று நீங்களே பார்க்கலாம். சினிமா கொட்டகையை தவிர்த்து பார்க், பீச் என செல்லலாம். இந்த இரண்டுநாளில் நீங்கள் சந்தித்தது, சாதித்தது, பேசியது, விளையாடியது, ஆகியவை பசுமரத்தாணிபோல் உங்கள் வாழ்க்கை எங்கும் உயிருடன் இருக்கும்.

நகராட்சியில் பிறந்த பதிவு வாங்குவதற்கு எத்தனை அலைச்சல் தெரியுமா? பியூன் நம்மிடம் "25 ரூவா கொடுசார் 10 நிம்சத்தில பெர்த் சர்டிஃபிகேட் தர்றேன்" என்று கொடுத்தால் இதுக்குபோயா 25 ரூபாய் என்போம். உங்களை அலையவிட்டு, பிறகு 25 ரூபாய் கேட்டால் அதன் பெருமதி விளங்கும். சுருக்கமாக சொல்லவேண்டுமானால் பொருளின் மதிப்பு விளங்க வேண்டும். அட பசித்து சாப்பிட வேண்டும் அவ்வளவுதான்.

மனைவியிடம் உங்களைப்பற்றி உங்கள் குணநலன்களைப் பற்றி சொல்லுங்கள். பொய்யாக பீற்றிக்கொள்ள வேண்டாம். உங்களின் வாழ்க்கை துணைவி உங்களுடனே எப்பொழுதும் இருக்கப்போகிறவள். அவளிடம் நான் தங்க பாத்திரத்தில்தான் சாப்பிடுவேன், பன்னீரில்தான் குளிப்பேன் என்று கப்ஸாவிட்டீர்கள் என்றால் சீக்கிரத்தில் உங்களின் சாயம் வெளுத்துப்போய்விடும்.

சிலர் தன்னைப்பற்றிய வண்டவாளத்தை எல்லாம் பிரத்யேக ஸ்டேட்டஸ் என நினைத்து மனைவியிடம் சொல்லி வாங்கிக்கட்டிக் கொள்வார்கள். இப்படிதான் முதலிரவு அன்று தன் மனைவியிடம் ஒவ்வொரு பிள்ளையார் கோயிலாக போய் சைட் அடித்தது, தண்ணி அடித்தது, பெண்பழக்கம் உள்ளது எல்லாவற்றையும் திருமணமான இரவு மனைவிடம் சொல்லவே, அவள் அலறி அடித்துக்கொண்டு தன் தந்தையிடம் சென்று "போயும் போயும் குடிகாரனை எனக்கு கல்யாணம் பண்ணிவைத்துவிட்டீர்களேப்பா" என்றாளாம்.

அப்படியென்றால் மனைவியிடம் உண்மையை சொல்லக்கூடாதா என்று கேட்கலாம். நிச்சயமாக சொல்லலாம். இப்பொழுது அல்ல. உங்களின் நற்குணங்களை தெரிந்துக்கொண்ட பின்னர் சொல்லலாம். அப்படியில்லையென்றால் உங்களின் மைத்துனியைக்கூட உங்கள் அருகில் வர அனுமதிக்கமாட்டாள் உங்கள் மனைவி.

இதையே இன்னொருவிதமாக நினைத்துபாருங்கள். திருமணத்திற்கு முந்தைய அவளின் இருண்ட வாழ்க்கையைப்பற்றி நீங்களோ அல்லது உங்களின் இருண்ட வாழ்க்கையைப்பற்றி அவளோ தெரிந்துக்கொண்டு என்ன செய்யப்போகிறீர்கள். பிறிதொரு காலத்தில் உன்னையைப்பற்றி தெரியாதா? என்னைப் பற்றி தெரியாதா? என்று சொற்போருக்காகவா? பழையவைகளை கிளறுவதைவிட இனி நடக்கப்போகிறதை பாருங்கள் சார்.

இதற்கு மேல் கட்டுரையை நீட்ட விரும்பவில்லை. தேவையான விஷயங்களை பிரிதொரு சமயத்தில் பல்வேறு தலைப்புகளில் தர முயற்சி செய்கிறேன். அதற்குமுன் உங்களுக்கு ஒரு புத்தகத்தை மட்டும் சிபாரிசு செய்கிறேன். அது சுவாமி சுகபோதானந்தாவின் "அகமே ரிலாக்ஸ் ப்ளீஸ்". இந்து, முஸ்லிம், கிருஸ்துவர் என்று சாதிமதம் பார்க்காமல் திருமணத்திற்கு முன்பு படிக்கவேண்டிய புத்தகம்.

(இதற்கு முன் அவர் வெளியிட்டது "மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்". இணையத்தில் கூட இப்புத்தகம் கிடைக்கிறது) மனிதம், மனிதம் என்று சொல்லிக்கொண்டு மறுபுறம் மதத்தின் பெயரால் வெட்டிக்கொள்ளும் இக்காலத்தில், அனைத்து மதத்தில் இருந்தும் நல்ல கருத்துக்களை, கதை வடிவில் நகைச்சுவையாக சொல்பவர் சுவாமிஜி. நான் சுவாமி சுகபோதானந்தாவை சந்யாஸியாக பார்க்கவில்லை. மனிதர்களின் குணநலன்களை அறிந்த உளவியல் மருத்துவராக பார்க்கிறேன்.

Saturday, November 27, 2004

முதலிரவு டிப்ஸ் - 1

திருமணம் ஆனவர்கள் அனைவரும் தனது முதலிரவு நிகழ்வுகளை ஞாபகத்திற்கு கொண்டுவந்தால், அப்படி நடந்திருக்கலாமே, இப்படி நடிந்திருக்கலாமே, அவசரப்பட்டுவிட்டோமே என்று அங்கலாய்த்துக்கொள்வார்கள்.

இதில் யாரும் விதிவிலக்கில்லை. அப்படி அவசரப்படுவதே நம்ம Male Kind-தான் சார். (யாருக்கு முன் அனுபவம் இருந்ததோ அவர்களைத்தவிர).

நமது Male kind நண்பர்கள் பலர் திருமண நாளை எதிர்நோக்கியிருப்பதால், அவர்களுக்கு இந்த அறிவுரைகள் பயனளிக்கலாம். இதெல்லாம் எனது அனுபவம் என்று எண்ணிவிடவேண்டாம்.

ம்ம்... நீங்களாவது நல்லாயிருக்கனும் என்ற நல்ல எண்ணம்தான்.

சரி விஷயத்தை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

திருமணம் நடந்த அன்றே சாந்திமுகூர்த்தம் வைத்துக்கொள்வதை தள்ளிப்போடலாம். மாப்பிள்ளை பெண் இருவருக்கும் உள்ள ஏக்கங்கள் அளவுகடந்து இருந்தாலும் அவர்களின் உடம்பு அதற்கு ஒத்துழைப்பு கொடுக்குமா என்பதுதான் காரணம். திருமணத்திற்கு முந்தையநாள் கண்விழித்து தோழி தோழர்களுடன் அரட்டை அடித்தது. திருமண மண்டபத்திற்காக வெளியூர் பயணம், சம்பிரதாயங்கள் என்று பல்வேறு காரணங்களுக்கு மாப்பிள்ளை பெண் இருவரையும் பெண்டு கலட்டியிருப்பார்கள்.

சாந்திமுகூர்த்தம் அன்றே வைக்கவேண்டும் என்று யாராவது அடம்பிடித்தால் உங்கள் மனைவியிடம் ஒப்பந்தம் போட்டு இரண்டு நாட்களுக்கு தள்ளி போடலாம். இந்த ஒப்பந்த செய்தி உங்களுடன் இருக்கட்டும். செய்தி லீக் ஆகிவிட்டால் அவ்வளவுதான்.

சரி சார், அந்த இரண்டுநாளில் என்ன செய்வது என்கிறீர்களா? அதை அடுத்து பார்க்கலாமே.

Friday, November 26, 2004

உள்ளே, வெளியே இருக்கும் அத்தனைபேரும்...

சங்கர்ராமன் கொலைவழக்கில் கொலை செய்யப்பட்ட அன்று தம் வீட்டுக்கு வந்து தனது கணவரை தேடிச்சென்ற ரவுடிகளை திருமதி பத்மா சங்கர்ராமனும் அவரது மகளும் அடையாளம் காட்டியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது கொலை சம்பவத்தை நேரில் பார்த்த கோயில் ஊழியர் கணேஷும் குற்றவாளிகளை அடையாளம் காட்டியுள்ளார்.

அதேபோல், ஆடிட்டர் ராதாகிருஷ்ணன், அவரது மனைவி ஜெயஸ்ரீ ஆகிய இருவரும் சென்னை மத்திய சிறைக்கு வந்து தங்களைத் தாக்கியவர்கள் பற்றி அடையாளம் காட்டியுள்ளார்கள்.

இந்த கொலையை தூண்டியவர்கள் யாராகவும் இருக்கலாம். அவர்களுக்கு தண்டனை கிடைக்கலாம் அல்லது வழக்கிலிருந்து தப்பிக்கலாம். ஆனால் கொலை கருவியாக பயன்பட்ட ரவுடிகள் வசமாக மாட்டியுள்ளார்கள். சட்டம் தன் கடமையை செய்ய அரசியல்வாதிகளின் இடைஞ்சல் இல்லாதிருந்தால் குற்றவாளிகள் தண்டனை பெறுவது உறுதி.

முதல்பக்கம்:
இந்த சம்பவங்களை படிக்கும்போது சென்னை உயிர்நீதி மன்ற வளாகத்தில் நேரில் கண்ட காட்சி என்கண்களில் நிற்கிறது. வழக்கிற்காக கொண்டுவரப்பட்ட ரவுடிகளை ஒரு இடத்தில் அடைத்து வைத்திருக்கிறார்கள். அங்கு நடக்கும் கூச்சலும், கலாட்டாவும் விவரிக்க இயலாது. பிறகு குற்றவாளிகள் மத்திய சிறைக்கு அழைத்துச்செல்வதற்காக வேனில் அடைக்கப்படுகிறார்கள். அப்பொழுது சில பெண்கள் (உறவினராக இருக்கலாம்) பீ.டி. சிகரெட் போன்றவற்றை கொடுப்பதற்காக கம்பி போட்டு அடைக்கப்பட்ட வேனை சுற்றிவரவே போலீசார் விரட்டுகிறார்கள். வேன் புறப்பட்ட பின் அந்த வேனின் பின்னால் ஓடி காரியத்தை சாதித்துக்கொள்கிறார்கள்.

ரவுடிகளுக்கு எனது கேள்விகள்:
1) உங்கள் பெண்களும் மற்ற குடும்ப பெண்களைப்போல் மானம் ரோஷம் போன்றவைகள் உள்ளவர்கள் அல்லவா?
2) அவர்களை கோர்ட்டு வாசலில் உங்களுக்காக தவம் இருக்கச் செய்யும் காரியங்கள் எந்த வெள்ளையனை விரட்டுவதற்காக செய்தீர்கள்.
3) நீங்கள் செய்ததெல்லாம் யாரோ ஒரு அரசியல்வாதி, ஒரு ஆன்மீகவாதி அல்லது பேட்டை தாதா வாழ்வதற்காக செய்தவையே.
4) உங்களை ஏவிய அவர்கள் உள்ளே அல்லது வெளியே உல்லாசமாக இருக்கிறார்கள். ஆனால் உங்கள் கதியை நினைத்து பார்த்தீர்களா?
5) உங்கள் மனைவியின் பாதுகாப்பு குழந்தைகளின் கல்வி இவற்றைப்பற்றி நீங்கள் சிந்தித்திருந்தால் இவ்வாறு செய்வீர்களா?
6) நீங்கள் உள்ளே இருக்கும் நேரம் பொருளாதார பிரச்சனைகளுக்காக கற்பிழக்கும் உங்கள் மனைவி, மகள்களை நீங்கள் நினைத்து பார்த்தீர்களா?
7) உங்கள் மகன்கள் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, உங்களைப்போல் ரவுடியாக மாற விரும்புகிறீர்களா?
8) இன்னும் சில கேள்விகளை நீங்களே கேட்டு திருந்திக்கொள்ளுங்கள்.


மறுபக்கம்:
சந்தேகவழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவரை சென்னையிலுள்ள ஒரு காவல்நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு அழைத்துசெல்கிறார்கள். அவரை அழைத்துச்செல்லும் இரு காவலரும் பேசிக்கொள்கிறார்கள்:

"ஏம்ப்பா சீக்கிரம் இவரை கோர்ட்டுக்கு அழைச்சிட்டு போகனும். பெயில்ல எடுக்க ஆள்வந்துருக்காங்க".

"அடப்போப்பா இவனை சீக்கிரம் அழைச்சிட்டு போறதனால நமக்கு என்ன இலாபம். இவனுங்கல அலைகழிச்சாத்தான் எதனாச்சும் கறக்க இயலும். நான் முன்னால ரவுயாகத்தான் இருந்தேன். யாரிடம் எப்படி கறக்கிறதுன்னு எனக்கு தெரியும்".

காவல்துறையினருக்கு எனது கேள்விகள்:
1) நீங்கள் வாங்கும் சம்பளம் மக்களின் வரிப்பணத்தில் கொடுக்கப்பட்டது என்பதை நினைத்துப் பார்த்தீர்களா?
2) உங்களுக்கு முதலாளி மக்களா? அரசியல்வாதிகளா?
3) மக்களின் பாதுகாப்புக்கு நீங்கள் நியமிக்கப்பட்டிருக்கிறீர்களா? அல்லது ரவுடிகளின் பாதுகாப்புக்கு நீங்கள் நியமிக்கப்பட்டிருக்கிறீகளா?
4) நீங்கள் பிடித்திருக்கும் அனைவரும் குற்றவாளிகள் அல்ல என்பது உங்களுக்கு தெரியுமா?
5) காசு கொடுக்காமல் நீங்கள் சாப்பிடும் பிரியாணியும் குவார்ட்டரும் யாரை ஏய்த்து வாங்கியது.
6) நீங்கள் ரவுடித்தனமாக நடந்துக்கொண்டால் நிச்சயமாக நீங்களும் உங்கள் குடும்பமும் ரவுடிகளால் தாக்கப்படும் நாள் அருகில் இருக்கிறது என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.
8) இன்னும் சில கேள்விகளை நீங்களே கேட்டு திருந்திக்கொள்ளுங்கள்.

தீவிரவாதிகள்

பத்திரிகைகளில் நாமெல்லாம் இதுவரை படித்திருப்பது முஸ்லீம் தீவிரவாதிகளைப்பற்றிதான். கடந்த நாட்களில் புதிதாக பத்திரிக்கையாளர்கள் லிஸ்டில் சேர்ந்திருப்பது தமிழ் தீவிரவாதிகள். இன்னும் சேராமல் இருப்பது இந்து தீவிரவாதிகள். திரு ராமகோபாலன் புண்ணித்தில் அதனையும் விரைவில் சேர்க்கும் நாள் தூரத்தில் இல்லை போல் தெரிகிறது.

பெருமாநல்லூர் அருகே பொம்மநாயக்கன்பாளையத்தில் மளிகைக் கடை நடத்தி வந்த நாற்பது வயது ஜஸ்டின் மதப்போதகராகவும் இருந்து வந்துள்ளார். அங்குள்ள மக்களை அவர் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றம் செய்து வருவதாக இந்து முன்னணி ஏற்றிவிட்ட வெறியில் 06-06-2003 அன்று ஜஸ்டினின் மளிகைக் கடைக்குள் இந்த 6 பேரும் புகுந்து, இரும்புக் கம்பி, அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். உயிர் ஊசலாட்டத்தில் இருந்த அவர் 01.07.2003 அன்று இறந்து போயிருக்கிறார். இவ்வழக்கில் பொம்மநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த

சண்முகம் மகன் மோகன்ராஜ் என்ற சக்திவேல் (வயது 26)
கருப்புசாமி மகன் சுகு என்ற சுகனேஸ்வரன் (வயது 22)
முத்து மகன் பெருமாள் (வயது 25)
திருப்பூரைச் சேர்ந்த ஜீவானந்தம் மகன் ஜீவகணேஷ் (வயது 26)
சுப்பிரமணியம் மகன் மணிகண்டன் (வயது 26)
பரமசிவம் மகன் சங்கர் (வயது 24)

ஆகிய 6 இந்து முன்னணியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வியாழக்கிழமை திருப்பூர் விரைவு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

இளைஞர்களை தனது தீவிரவாத பேச்சால் வழிகெடுக்கும் மத தலைவர்கள் ஒழிந்தால்தான் தமிழ்நாட்டுக்கு அமைதி திரும்பும். குறைந்த கால இடைவெளியில் 34 சாட்சிகளை விசாரித்து தீர்ப்பு கூறிய விரைவு நீதிமன்றத்தையும், காவலர்களையும், தமிழ்நாட்டு அரசையும் பாராட்டாமல் இருக்கமுடியாது.

காஸ்ட்லியான மூளை எது?

இரண்டு குடிமகன்கள் பிராந்தி கடையில் பேசிக்கொண்டார்கள்.

டேய் போன வாரம் மார்க்கெட் போயிருந்தப்ப மனித மூளைகளை விற்றாய்ங்க. இந்தியர்களின் மூளை டாலருக்கு ஐந்து என்று கூவி கூவி விற்றாய்ங்க. எங்க நாட்டுக்காரன் மூளைதான் ரொம்ம்ம்ப காஸ்ட்லி என்றான்.

மாம்ஸ் உங்க நாட்டுக்காரங்களோட மூளை காஸ்ட்லியா விற்றதற்கு காரணம் இருக்கு. எங்க ஆட்கள் (இந்தியர்கள்) மூளையை யோசிக்க பயன்படுத்துறாய்ங்க. பயன்படுத்திய மூளை என்பதால் மட்டமான விலை. உங்க நாட்டுக்காரன் அப்படியா? பயன்படுத்தாம அப்படியே ஃபிரஸ்ஸா வச்சிருக்கான் என்றான்.



Thursday, November 25, 2004

அப்பாவைப் பற்றி பிள்ளைகளின் எண்ணங்கள்

பிள்ளைகள் தன் அப்பாவைப் பற்றி வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் எப்படியெல்லாம் வித்தியாசமாக எண்ணுகிறார்கள் என்பதே செய்தி. மின்னஞ்சலில் வந்த சரக்கு.

At 4 Years My daddy is great.
At 6 Years My daddy knows everybody.
At 10 Years My daddy is good but is short tempered
At 12 Years My daddy was very nice to me when I was young
At 14 Years My daddy is getting fastidious.
At 16 Years My daddy is not in line with the current times.
At 18 Years My daddy is becoming increasingly cranky.
At 20 Years Oh! Its becoming difficult to tolerate daddy. Wonder how Mother puts up with him.
At 25 Years Daddy is objecting to everything.
At 30 Years It's becoming difficult to manage my son. I was so scared of my father when I was young.
At 40 Years Daddy brought me up with so much discipline. Even I should do the same
At 45 Years I am baffled as to how my daddy brought us up.
At 50 Years My daddy faced so many hardships to bring us up. I am unable to manage a single son.
At 55 Years My daddy was so far sighted and planned so many things for us. He is one of his kind and unique.
At 60 Years My daddy is great.

Thus, it took 56 years to complete the cycle and come back to the 1st stage!

So, Don't waste time and Never forget your parents.

அரசியல் சதுரங்கம்

அரசியலில் நிலையான நண்பனும் இல்லை நிலையான எதிரியும் இல்லை என்பார்கள். திரு ஜயேந்திரர் கைது நடவடிக்கைக்கு பிறகு கலைஞர் அவர்களின் அறிக்கைகளும் அப்படிதான் உள்ளது. எது எப்படி இருந்தாலும் பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி போன்ற அமைப்புகள் தி.மு.க.வை ஆதரிக்கப்போவதில்லை. அப்படியே ஆதரித்தாலும் தி.மு.க.வினால் தனக்கு கிடைக்கும் பயன்களை நுகர்வதற்காக இருக்குமே தவிர அம்மா மேல் உள்ள இனம்புரியாத பாசம் இருக்கப்போவதில்லை.

பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி போன்ற இயக்கங்கள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை கண்டித்து அறிக்கை விடுவதில் அவர்கள் கடைபிடிக்கும் மென்மையான போக்கு கூர்ந்து பார்த்தால் தெரியும். தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இல்லை என்றார் அத்வானி. இனி தங்களின் கூட்டணியில் அ.தி.மு.க.வுக்கு எந்த காலத்திலும் இடமில்லை என்று தீர்மானம் இயற்றினால் நன்றாக இருக்கும்.

திரு ஜயேந்திரரின் கைதுக்கு சதுர்வேதி சாமியார்தான் சந்தோசப்பட்டிருப்பார். காரணம் பிரேமானந்தாவுக்கு எழுதப்பட்டதுபோல் சதுர்வேதி சாமியாரின் அம்பலத்தொடர் பத்திரிக்கையாளர்களால் எழுத முடியாமல் நின்று போனதுதான். இதில் சாமியார் வீட்டில் மாமியார் மாமியார் வீட்டில் சாமியார் என்று ஸ்பெஷல் செய்தி போட்ட பத்திரிக்கைகளும் உண்டு.

சட்டமன்ற கல்லூரியில் MLA மாணவர்கள் பெஞ்ச் தட்டி அம்மாவின் சாதனை பாட்டு பாடுகிறார்கள். வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டது அம்மாவின் சாதனை என்றால், ஜயேந்திரர் கைதுக்கு காரணம், சட்டம் தன் கடமையை செய்கிறது என்று சொல்வானேன். அதையும் தங்கள் ஆட்சியின் சாதனை என்று சொல்வாரா அம்மா?.

சட்டம் தன் கடமையை செய்கிறது என்று சொல்லும் முதலமைச்சர் அவர்களே! அதற்கு இடையூறாக இருக்கும் பி.ஜே.பி-யிடம் இனியாவது கூட்டு சேராமல் இருப்பீர்களா?

திரு ஜயேந்திரர் கைதுக்கு உள்நோக்கம் இருக்கலாம் என்ற கலைஞர் சொன்னதற்கு காரணம் அம்மாவுக்கு அவப்பெயர் ஏற்படவேண்டும் என்பதற்காக என்றார் ஒரு காவி கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர். அப்படியென்றால் திரு ஜயேந்திரரை கைது செய்தது சரி என்கிறாரா? அப்படி சரி என்றால் ஏன் உண்ணாவிரதமும், பந்த்-ம் நடத்தவேண்டும்.

இந்தியாவில் உள்ள சட்டத்தின் ஓட்டைகளை பி.ஜே.பி. வகையறாக்கள் அறியாதவர்களல்ல. ஆனாலும் அம்மா எப்பொழுது எந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார். தெரிந்தோ தெரியாமலோ திரு ஜயேந்திரரை கைது செய்துவிட்டார். பிடி நழுவினால் அம்மாவின் நிலை சும்மாதான்.

இந்த இடத்தில் கலைஞர் மட்டுமல்ல. அம்மா இருந்தாலும் உள்நோக்கம்தான் கற்பிப்பார். ஏன் இதையும் தாண்டி செய்தாலும் மறுப்பதற்கில்லை. கலைஞர் சொன்ன உள்நோக்கத்திற்கு காரணங்களை வெளியிட்டிருக்கிறார். ஆக மொத்தத்தில் அரசியல்வாதிகள் தனக்கு பிடிக்காதவரை மட்டுமே உள்ளே தள்ளுவது என்று வழக்கமாக்கி இருக்கிறார்கள்.

தலைவர்களுக்கு ஓட்டு போட்டு எதற்காக சட்டமன்றத்திற்கு அனுப்புகிறார்கள்? மக்களுக்கு சேவை செய்யத்தானே. ஆனால் இன்றைய தலைவர்கள் எதிர்கட்சியினரை பழிவாங்கவேண்டும், பழிதூற்ற வேண்டும், பணம்புரட்ட வேண்டும் அல்லது கருப்பு பணங்களை காப்பாற்ற வேண்டும் என்றே ஆட்சிக்கு வருகிறார்கள்.

மக்களுக்கு Best from Worst தேர்ந்தெடுப்பதே தற்போதைய விதி என்றாகிவிட்டது. இன்று தமிழ்நாட்டுக்கு தேவை மக்களுக்காக உழைக்கும் தன்னலமற்ற தலைவர்.

Wednesday, November 24, 2004

டேய்! என்னை யார்னு நினைச்சே

ஆப்பிரிக்காவின் (ஏழ்மையான) விலங்குக்காட்சி சாலையில் வசித்துவந்த சிங்கம் அதிகபட்சமாக தினமும் கிடைக்கும் ஒரு கிலோ இறைச்சியை எண்ணி மனவருந்தி, தனக்கு நல்லதொரு வழி பிறக்க கடவுளிடம் பிரார்த்தித்தது.

அங்கு வருகை தந்த சவுதி அரேபியாவின் விலங்குகாட்சி சாலை ஒன்றின் நிர்வாகி, அந்த சிங்கத்தை தன் நாட்டுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

சென்ட்ரல் ஏ.சி. யூனிட் தரும் குளுகுளு வசதி, உணவுக்காக தினமும் ஒன்று அல்லது இரண்டு ஆடு, சவுதி குடியுரிமை அட்டை என கனவு காண ஆரம்பித்தது சிங்கம்.

சவுதி வந்த முதல் நாள் காலை உணவுக்காக ஒரு பொட்டலம் சிங்கத்துக்கு அனுப்பப்பட்டது. பொட்டலத்தின் அழகைப் பார்த்து அதன் உள்ளே பிரத்யேக உணவு இருக்கும் என எண்ணி அவசரமாக பிரித்த சிங்கத்திற்கு சில வேர்கடலைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி.

தான் கடல்கடந்து வந்திருப்பதால் தன் வயிற்றுக்கு கேடு எதுவும் வரக்கூடாது என்பதற்காக வேர்கடலை கொடுத்திருக்கிறார்கள், ஆகா நம்மீது என்னே ஒரு பரிவு, என்று எண்ணியது. இரண்டாவது நாளும் அதே உணவுதான் அனுப்பி வைக்கப்பட்டது.

மூன்றாம் நாள் வேர்கடலை கொண்டுவந்த பையனிடம்,
"டேய் பொடியா என்னை யார்னு நினைச்சே! நான் காட்டுக்கே ராஜா தெரியுமா? உங்களின் நிர்வாகத்திற்கு பித்து பிடித்துக்கொண்டதா? இது உங்களுக்கே முட்டாள்தனமாக தெரியவில்லையா? எனக்கு ஏன் வேர்கடலையை அனுப்புகிறீர்கள்?" என்று கர்ஜித்தது.

அதற்கு பையன் மிக பவ்யமாக,
"ஐயா! எனக்கு தங்களின் அருமை பெருமைகளைப்பற்றி நன்றாகத் தெரியும். (தவறுதலாக) குரங்கிற்கு உரித்தான விஷாவில் உங்களை வரவழைத்திருக்கிறார்கள்" என்றான்.

Tuesday, November 23, 2004

Made in India

அமெரிக்கா, ஜப்பான், இந்தியாவை சேர்ந்த விஞ்ஞானிகளின் அறிவுத்திறன் போட்டி நடந்தது.

அமெரிக்க விஞ்ஞானி கோலி குண்டு அளவில் ஒரு அணுகுண்டை காட்டி இதை எந்த நாட்டுமேலேயாவது போட்டா எல்லா உயிரும் பொசுங்கி போய்விடும் என்றார்.

அடுத்து ஜப்பான் விஞ்ஞானி ஒரு செல்ஃபோனை கொண்டுவந்து இதில் பேசிக்கிடலாம், எதிர்முனையில் இருப்பவர்களை பார்த்துக்கிடலாம். அதுமட்டுமல்ல. எதிர்முனையில் உள்ள வாசனையையும் இதன்மூலம் நுகரலாம் என்றார்.

அடுத்து நம் ஆள் ஒரு போண்டாவை கொண்டுவந்து நடுவரிடம் கொடுத்துவிட்டு, இது என் தயாரிப்பு Made in India என்று சட்டை காலரை தூக்கிவிட்டுக்கொண்டார்.

போட்டி முடிவு:
போண்டாவில் எந்த துளையும் இடாமல் முட்டையை உள்ளே செலுத்தியிருப்பதாலும் முட்டை எந்தவித சேதமும் இல்லாமல் இருப்பதாலும் திருவாளர் போண்டா முதல் பரிசை தட்டிச் செல்கிறார்.

ஊர் வரும் முன்னே...

காஷ்மீர், பம்பாய், மெட்ராஸை சேர்ந்த மூனு கிறுக்கர்களை ஒரு ஃபிளைட்ல ஏற்றி இந்தியாவை சுற்றிபார்த்துட்டு வாங்கன்னு அனுப்பிச்சாய்ங்க. காஷ்மீர் நெருங்குகிற சமயம்பார்த்து மூனு கிறுக்கர்களும் கைகளை வெளியிள நீட்டினாய்ங்க. காஷ்மீர் கிறுக்கன் எங்க ஊரு வந்துடிச்சுடான்னு கத்தினான்.

மற்ற இரண்டு கிறுக்கர்களுக்கும் ஆச்சரியம். எப்படி பாய் கண்டுபிடிச்சீங்கன்னாய்ங்க. அட செம கூலா இருக்கு அதவைத்து கண்டுபிடிச்சேன் என்றான்.

வண்டி பம்பாய் மேலே பறந்துகிட்டிருக்கிற சமயமா பார்த்து மூனு கிறுக்கனுங்களும் கைகளை வெளியிள நீட்டினாய்ங்க. பம்பாய் கிறுக்கன் எங்க ஊரு வந்துடிச்சிடான்னு கத்தினான்.

மற்ற இரண்டு கிறுக்கர்களும் ஆச்சரியமாய் எப்படி ஜீ கண்டுபிடிச்சீங்கன்னாய்ங்க. என் கைகடிகாரத்தை எவனோ அடிச்சிட்டானுவப்பா என்றான்.

ஃபிளைட் மெட்ராஸ் மேலே பறந்துச்சி. நம்ம ஆளு ஃபிளைட் ஜன்னல்கதவ திறந்தான். கூவம் நாற்றம் பொறுக்கமுடியாம காஷ்மீரியும் பம்பாய் வாலாவும் மூக்கைப் பொத்துனது பார்த்து அப்பாடா எங்க மெட்ராஸ் வந்துடிச்சி அப்படின்னான்.

Sunday, November 21, 2004

நான் கிறுக்க நினைப்பதெல்லாம்

நான் கிறுக்க
நினைப்பதெல்லாம்
நீ படிக்க வேண்டும்

நாளோடும் பொழுதோடும்
மறுமொழியிட வேண்டும்
மறுமொழியிட வேண்டும்
ம்...ம்ஹும்

வலைப்பதிவு அமைப்பதற்கு
பிளாக்கர்தான் வேண்டும்
பிளாக்கர்தான் வேண்டும்
ம்...ம்ஹும்

திரட்டி இன்றி கிறுக்கியதெல்லாம்
குப்பைக்கு போகும்
குப்பைக்கு போகும்
ம்...ம்ஹும்

மூன்று முறை கிறுக்கிவிட்டு
பதிவு செய்ய வேண்டும்
தமிழ்மணத்தில் பதிவு செய்ய வேண்டும்
ம்...ம்ஹும்