Tuesday, February 21, 2006

சந்தன மரம் வெட்டிய 7 போலீஸார் சிக்கினர்

சத்தியமங்கலம், பிப். 20: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப் பகுதியில் சந்தன மரங்களை வெட்டியதாக அதிரடிப் படை சப் - இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் உள்பட 7 போலீஸôர் ஞாயிற்றுக்கிழமை பிடிபட்டனர்.

இது தொடர்பாக, அதிரடிப் படை சப் - இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபிள்கள் 3 பேர், சமையல் உதவியாளர்கள் 3 பேர் ஆகிய 7 பேர் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து வனத்துறையினரும் அதிரடிப்படை தரப்பினரும் தீவிர ஆலோசனை நடத்தினர்.

சத்தியமங்கலம் அரேபாளையம் அருகே கேர்மாளம் செல்லும் வழியில் வனத் துறைக்குச் சொந்தமான காட்டுப் பகுதியில் சந்தன மரங்களை வெட்டிய அதிரடிப் படையினர் அதை வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தபோது பிடிபட்டனர்.

நன்றி:
www.dinamani.com


ஏதோ சந்தனமரம் கடத்தும்போது சிக்கிவிட்டனர். சிக்காத பெண்கடத்தும் போலீஸ், போதை பொருள் கடத்தும் போலீஸ், லஞ்சம் வாங்கும் போலீஸ், கட்டப்பஞ்சாயத்து செய்யும் போலீஸ் எப்பொழுது சிக்குவார்களோ?.