Monday, May 22, 2006

சாதிச் சண்டையால் கொல்லப்படும் தலித்கள்

பீகாரில் சாதிக் கொலைகள்

இந்தியாவின் கிழக்கு மாநிலமான பீகாரில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் குறைந்தபட்சம் ஒன்பது தலித் மக்களை ஆயுததாரிகள் கொன்றுள்ளனர்.

பீகார் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்திற்குள் சனிக்கிழமையன்று இரவு உட்புகுந்த ஆயுததாரிகள், கண்மூடித்தனமாக துப்பாக்கி சூட்டினை மேற்கொண்டதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் குழந்தைகளும் அடங்குவர்.

இந்தியாவில் மிகவும் சட்டம் ஒழுங்கற்ற பிராந்தியம் என்று கூறப்படும் இப்பகுதியில், தொடர்ந்து நடைபெற்று வரும் ஜாதி மற்றும் சமூக விரோத கும்பல்களின் மோதலின் ஒரு பகுதியே இந்த வன்முறை என அதிகாரிகள் தெரிவித்துள்ளளனர்.

http://hosuronline.com/update/news/tamilnews/read.asp?newsID=1426

No comments: