Tuesday, May 17, 2005

வெறியர்களின் விமர்சனம் மற்றவர்களுக்குத்தான்

இந்துவாக மாறினால் பிராமண வகுப்பில் சேர்த்துக்கொள்வீர்களா? என்று ஆரோக்கியத்திடம் ஒரு கேள்வியை எம்.எம்.ராஜா முன் வைத்திருந்தார்.

இந்து மதத்தின் பிரிவாக என்னை சேர்த்துக்கொள்ள விரும்பும் இவர்கள், பிராமணனாக upgrade செய்ய வெறுக்கும்போது உங்களுக்கு ஏன் இந்த எண்ணமெல்லாம்.

தீண்டாமையின் முதல் காரணமே பிராமணர்கள் வகுத்த ஜாதிய முறையும் அவர்களின் தலைமைத்துவமும் அதற்கு வால்பிடிக்கும் ஓணாய்களும்தான். மற்றபடி நண்பர் ராஜா எனது பதிவில் வந்துள்ள தொடர்களிலிருந்து கேள்விகள் தொகுத்து கொடுத்திருப்பது மிக்க பயனுள்ளது.

அவர் ஆரோக்கியத்திடம் கேட்ட கேள்விகள்.

//1) நான் இந்துமதத்திற்கு மாறினால் உங்களின் உயர்ந்த பிரிவான பிராமண வகுப்பில் சேர்த்துக்கொள்வீர்களா?

"இந்துக்களே விழிமின் எழுமின்" கட்டுரையை எழுதிய Dr. சாட்டர்ஜி M.A., Ph.d,. (USA) அவர்கள், "பிராமணர்கள் இந்த நாட்டின் குடிமக்களது மதங்களை குறை கூறியும் கிண்டல் செய்தும் வருகின்றார்கள். ஆனால் அவர்கள் தங்களின் சொந்த மதத்தை - அதன் விதிமுறைகளை - அதே விமர்சன கண்களோடு பார்க்க மறுக்கின்றார்கள். ஆகவே தான் நாம் இந்த நூலை எழுதிட வேணடிய நிலைக்குத் தள்ளப்பட்டோம் என்றும் விருப்பு வெறுப்பின்றி நாம் ஓர் அறிவுப்பூர்வமான ஆராய்ச்சியை மேற்கொள்வோம்" என்கிறார்.

மேலும் இதற்கு Dr. G. சிரீவத்சா M.A., Ph.d,. London பரிந்துரை செய்துள்ளார். இந்து வேதங்கள் பற்றி அரசல்புரசலாக சில விஷயங்கள் கேள்விப் பட்டாலும் Reference புத்தகங்களோடு எழுதியிருப்பதால் அதனை முக்கியத்துவப்படுத்தி பின்வரும் கேள்விகளை முன் வைக்கிறேன்.

2) லிங்கம், யோனி(கடவுளின் உடலுறவு உறுப்புகளை) ஏன் இந்துக்களான நீங்கள் வழிபாட்டு பொருட்களாக வைத்துள்ளீர்கள். லிங்கம், யோனிக்கு பூஜை செய்வதால் கடவுள்கள் சந்தோசப்படுகிறார்களா?. நமது உறுப்புகளை பிறர் தொட்டால் கேவலமான பெயர்கள் அதற்கு உண்டு. கடவுளின் உடலுறவு உறுப்புகளை தொடுவது கடவுளுக்கும் மனிதனுக்கும் கேவலம் இல்லையா? அந்த உறுப்புக்கு பட்டை போட்டு பொட்டு வைத்து படம் எடுத்து பூஜை அறையில் மாட்டிவைப்பதில் தாத்பாரியம் என்ன?

3) பிரம்மா சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். திருமணச் சடங்குகளின் போது இருவரும் தீயை வலம் வந்து கொண்டிருந்தார்கள். வலம் வந்து கொண்டிருக்கும போதே பார்வதியின் மடல்வாளைத் தொடைகளை சிவன் பார்த்துவிட்டான். பார்த்ததும் இந்திரியம் வெளிப்பட்டுவிட்டது. இந்த இந்தியத்தைத் தாங்கள் வலம் வந்து கொண்டிருந்த தீயில் பாய்ச்சினான் சிவன். ரிஷிகள் பிறந்தார்கள். இதற்கு உங்களின் விளக்கம் என்ன?

4) நரசிங்கபுராணம் பக்கம் 169 அபிதான சிந்தாமணி பூமி தட்டையானது என்று கூறுவதன் விளக்கம் என்ன?

5) விஷ்னுபுராணத்தில் சூரியன் 800,000 மைல்களுக்கப்பால் இருப்பதாகவும், சந்திரன் 2,200,000 மைல்களுக்குப்பால் சூரியனைவிட அதிக தூரத்தில் இருப்பதாகவும் கூறுகின்றததே. இதற்கு உங்கள் பதில் என்ன?

6) மாட்டுச் சாணத்தில் எடுக்கப்படும் சாம்பல் புனிதமானது. அதற்கு நோய் நீக்கும் மருத்துவ குணங்கள் உண்டு என்றெல்லாம் சொல்கிறார்களே? சற்று விளக்கம் தர முடியுமா?

7) வால்மீகியின் இராமாயணத்தில் இராமன் இறைச்சி உண்டான் என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. பிறகு ஏன் இராமனை வணங்கும் பிராமணர்கள் சைவம் என்கிறார்கள்.

8) 6000 கிருஸ்துவ ஆலயங்களையும், 3000 பள்ளிவாசல்களையும் இடிப்பதற்கு பிளான் செய்திருக்கும் இந்து தலைமை அப்படி என்ன ஒரு பன்முகத்தன்மையையும் அமைதியையும் இந்தியாவுக்கு தேடித்தரும்?.

9) மதம் மாறும் உரிமைப்பற்றி பேசும் நீங்கள், பல மதங்களிலிருந்து இஸ்லாமியர்களாக மாறி தன் பழைய மதத்தின் பெயரையே முழுவதுமாக மறந்தவர்களை குஜராத்தில் துடிக்க துடிக்க கொன்றதும், பெண்களை கற்பழித்ததும், குழந்தைகளை நெருப்பில் போட்டு பொசுக்கியதும்தான் ஏன்?

10) கிருஸ்துவ பாதிரியார்களையும் அவரின் குழந்தைகளையும் உயிரோடு நெருப்பிட்ட கொடியவர்களை இந்துக்கள் சிலர் தேசபக்தியுள்ளவர்களா காட்டுவது எதனால்?

11) எல்லாவற்றிற்கும் மேலாக அண்ணல்காந்தியை கொன்றவர்கள் ஒரு இந்து அமைப்பினரும் அவர்களை சேதபக்தர்களாக சித்தரிப்பதும் ஏன்? இவர்கள் பின்லேடனைவிட கொடியவர்கள் அல்லவா?

12) கழுதை, பாச்சான், பல்லி இவற்றின் துன்பதுயரங்களை அறிந்திட கடவுள் கழுதையாகவும், பாச்சானாகவும் பல்லியாகவும் அவதாரம் எடுத்துத் தான் வரவேண்டுமா?

13) தன் மனைவியை காப்பாற்றத் தெரியாத இராமன் ஒரு கடவுளா?

14) இராமன் சீதையை மனைவியாக, இளவரசியாக மணந்து கொண்டாலும் அவர் தன்னுடைய காம இன்பத்திற்காக அரசப்பழக்க வழக்கங்களுக்கிணங்க இன்னும் அநேகப் பெண்களை மணந்து கொண்டார். (அயோத்தியா காண்டத்தின் 8ஆவது அத்தியாயம் பக்கம்- 28). இதற்கு தாங்கள் கூறும் விளக்கம் என்ன?

15) இராமன் பல பெண்களின் மூக்கு மார்பு, காது ஆகியவற்றை வெட்டி சித்திரவதைப்படுத்தினான். அவர்களை நிரந்தரமாக மானபங்கப்படுத்தினான். எடுத்துக்காட்டாக சூர்பனகை, அய்யம்முகி.

கடவுள் இராமன் சொன்னான்:
"பெண்களை நம்பக்க கூடாது. மனைவியிடம் இரகசியங்களைப் பேசக் கூடாது". (அயோத்தியா காண்டம், அத்தியாயம் 100)

இராமன் சம்புகா என்பவனைக் கொலை செய்தான். காரணம் அவன் தவம் செய்தான். அவன் தவம் செய்வது அவனுக்கு தடை செய்யப்பட்டது. அதற்குக் காரணம் அவன் சூத்திரன். (உத்திர காண்டம், அத்தியாயம் 76)

இராமன் தன் கைகளைப் பார்த்து இப்படிக் கூறினான். வலதுகரமே! இந்தச் சூத்திரனைக் கொன்று விடு. ஏனெனில் இந்தச்சூத்திரனைக் கொல்வது தான் இறந்து போன பிராமண பாலகனை மீட்டுத் தரும்.

சூத்திரன் என்ற ஒரே காரணத்திற்காகத் தான் இராமன் "சம்புகா" என்பவனைக் கொன்றான். அந்தச் சூத்திரன் அப்போது செய்த தவறு அவன் தவம் செய்தான்.

சீதை இராமனிடம் கூறினாள்: "தன் மனைவியைப் பிறருக்குக் கொடுத்து பிழைக்கும், பெண்களின் பின்னே அலையும் ஓர் மனிதனைவிட நீ எந்த விதத்திலும் உயர்ந்தவன் இல்லை. நீ என்னுடைய விபச்சாரத்தில் இலாபம் அடைய விரும்புகின்றாய்"

இராமனிடம் சீதை இன்னும் சொன்னாள்:

"நீ ஆண்மைக் குன்றியவனாகவும், இங்கிதம் இல்லாதவனாகவும் இருக்கின்றாய். நீ ஒரு வெகுளி"

இராவணனின் மாளிகையில் அடியெடுத்து வைத்ததும் இராவணனின் பால் அவள் அன்பு கொள்ள ஆரம்பித்தாள். (ஆதாரம்: ஆரிய காண்டம், அத்தியாயம் -54)

சீதையின் கற்பைப் பற்றி இராமன் விரிவாக வினவிய போது சீதை மறுத்தாள், மரணித்தாள். (உத்திர காண்டம், அத்தியாயம் - 97)

இந்த இராமனைத்தான் இந்திய மக்கள் அனைவரும் கடவுளாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறீர்களா?

16) குளித்துக்கொண்டிருந்த கீழ்ஜாதிப் பெண்களின் துணிகளை எடுத்து ஒளித்து வைத்த கிருஷ்ணன்தான் இந்துக்களின் கடவுளா? அவரின் ஆசை இளம்பெண்களை நிர்வாணமாக பார்ப்பதுதானா?

17) பார்வதி தன் அழுக்கை உருட்டி ஒரு குழந்தையை உருவாக்கி விடுகின்றாள். அந்த அழுக்குருண்டைக்குப் பெயர் (கடவுள்) கணேசன்.

இந்தக் கடவுள் கணேசனின் தலையைத் தவறுதலாய் வெட்டி விடுகின்றான்.

எந்த கடவுளாவது இந்தத் தவறைச் செய்வானா? இவனை கடவுளாக எடுத்தக் கொண்டால் நமது வாழ்க்கையில் சிக்கல் வளருமா? தீருமா?

18) கடவுளுக்காக மூன்று வருடங்களில் 2500-க்கு மேல் இளம்பிள்ளைகளையும் பெண்டிர்களையும் காவு கொடுப்பதைத்தான் இந்துமதம் வலியுறுத்துகிறதா?

19) ஐந்து பேருக்கு மனைவியான பாஞ்சாலிதான் வணங்கப்படக்கூடியவளா?

20) உங்களின் இறைவன் யார்?

கங்கையையும், வெண்ணிலவையும் தன் தலை மேல் கொண்டுள்ள அதே நேரத்தில் தன் மகனையே யார் என்று தெரியாமல் தலையைக் கொய்த சிவனா?

அல்லது சாதாரண சுக்ரீவனின் மாறுவேடத்தைப் புரிந்து கொள்ள இயலாத இன்னொரு கடவுளை மறைந்திருந்து கொலை செய்த இராமனா?

அல்லது மன்மத லீலைகளில் மிகைத்து நின்ற கிருஷ்ணனா?

21) மன்னன் தசரதனுக்கு குழந்தைகள் இல்லை. அவர் எப்படியேனும் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்று விரும்பினார். இதற்கவர் ஒரு பெரும் யாகம் செய்தார். பின்னர் அவர் தம் மனைவிமார்களை - கௌசல்யா, சுமித்திரை, கையேயி ஆகிய மூவரையும் மூன்று பூசாரிகளிடம் அனுப்பினார். இந்தப் புனித மனிதர்கள் தங்களுடைய காமப் பசியைத் தணித்து முடித்து மூன்று பெண்களையும் அவர்களது கணவர் கடவுள் இராமனின் தந்தை தசரதனிடம் அனுப்பினார்கள். இந்த முறையின் மூலம் மன்னன் தசரதனுக்கு இராமன், லஷ்மணன், பரதன் என மூன்று ஆண் குழந்தைகள் கிடைத்தார்கள். (பாலகாண்டம் - அத்தியாயம்-14)

விபச்சாரத்தின் மூலம் பிறந்தவன்தான் கடவுளா?

இந்து நண்பர்கள் எனது நியாயமான கேள்விகளை திசை திருப்பாமல் பதில் சொல்வார்கள் என்று நம்புகிறேன்.//

M.M.ராஜா,
இதில் சதி என்ற முறையும், வர்ணாசிரமம் பற்றியும் நீங்கள் கேள்வி கேட்காமல் விட்டதன் காரணம் என்ன? அதான் நந்தலாலா கேட்டிருக்கிறாரே என்பதற்காகவா?

நானும் நம்புகிறேன். ஆரோக்கியம் போன்ற காவி சிந்தனாவாதிகள் பதில் அளிப்பார்கள் என்று.

7 comments:

SHIVAS said...

சமய காப்பியங்கள், இதிகாசங்கள் அவ்வளவும் டுபாகூர் என்று சாதரண மனிதர்களுக்கே
புரியத் துவங்கிவிட்டது. அதிலும் இராமாயணம் ரொம்ப சுத்தமான டுபாகூர்.

ஆனால் //உங்களின் இறைவன் யார்?//

இந்த கேள்விக்கு இஸ்லாம் உட்பட எந்த மதத்தவரும் பதில் சொல்ல இயலாது. சொன்னாலும் அது உண்மை என்றாகாது.

MEA said...

//இராமாயணம் ரொம்ப சுத்தமான டுபாகூர்//

காஞ்சி,
இராமன் என்னும் டுபாகூர் நாயகனுக்காக ஏன் இவர்கள் இரத்த வெள்ளத்தினை ஓட்டுகிறார்கள்?

இந்த டுபாகூர் கதையை வைத்து ஒரு கூட்டம் அரசியல் நடத்த முடிகிறது என்றால் எத்தனை சதவீத மக்கள் உண்மை புரிந்திருக்கிறார்கள் காஞ்சி?

SHIVAS said...

இரெண்டு வருஷம் சினிமாவில் நாயகனாக இருந்தாலே அவனது "கட்டவுட்டிற்கு" பாலபிஷேகம் செய்யும் மக்கள் ஐயா நம்முடைய மக்கள். இரெண்டாயிரம் வருட புராண நாயகனுக்காக இன்னும் கொஞ்சம் அதிகம் உணர்ச்சி வசப்படுகிறார்கள், அவ்வளவுதான்.

இந்த புராண இதிகாசங்கள் எல்லாம் சாதாரண கதைகள் தான். இதில் வரும் கதாபாத்திரங்கள் கடவுள்கள் இல்லை என்று வளரும் தலைமுரையினருக்கு எடுத்துச்சொல்ல இது வரை என்ன செய்து இருக்கிறோம்? பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட நாளிலிருந்து துவங்கி இருந்தால் கூட இந்நேரம் ஒரு தலைமுரையினருக்கு புரிந்துபோயிருக்கும்.எப்படி செய்வது? யார் செய்வது? பாடபுத்தகங்களில் உள்ள புராண கதைகளை நீக்கினாலே போதும் நாம் பாதி கிணத்தை தாண்டியது போல. ஆனால் எப்படி செய்வது? யார் செய்வது?
செய்ய வந்த திராவிட கட்சிகளே இன்று மஞ்சள் துண்டு போட்டிருக்கும் போது நாம் என்ன செய்யமுடியும்? இந்தியாவின் விதி அவ்வளவுதான் என்று விட்டுவிடலாமா? அதுவும் முடியாது. "ப்ளோகில்" இப்படி புலம்புவதால் எதாவது சாதிக்க முடியுமா?
கூட்டம் போட்டாலும், நாலு கருப்புச் சட்டைகள் ஒளிந்து ஒளிந்து வந்து கைதட்டி விட்டு சென்று விடுவார்கள்.அது நமக்குத் தேவையில்லை. இன்றைய இளையத் தலைமுரையினருக்கு அது போய் சேராது.பிறகு என்ன செய்யலாம்?

//எத்தனை சதவீத மக்கள் உண்மை புரிந்திருக்கிறார்கள்//

புரிந்தவர்கள் காட்டிக் கொள்வதில்லை. அது தான் இந்தியாவில் பிரச்சனை. புரிந்தவர்கள் அடுத்தவர்களுக்கு சொல்ல சிரத்தை எடுப்பதில்லை. இது அடுத்த பிரச்சனை.


//உங்களின் இறைவன் யார்?//
இந்த கேள்விக்கு திரு.M.M.ராஜா பதில் சொல்லவாரா? அல்லது சொல்லிவிட்டாரா?

SHIVAS said...

//இந்துக்கள்தான் பதில் சொல்லவேண்டும்//
முதலில் இந்துக்கள் யார் என்று நீங்கள் தான் சொல்லவேண்டும்? பிராமண்ணியம் செய்த கயமைத்தனமான கண்டுபிடிப்புகளே இப்போது நீங்கள் கூறிய "சிவன்" "இராமன்" "கிருஷ்ணன்" என்னும் புராண கதாபாத்திரங்கள். அவர்களை கடவுளாகியது நம்முடைய அறியாமை.
இந்த பிராமணியத்தின் பித்தலாட்டங்களை பட்டியலிட்டவரே புத்தர். கடவுள் இல்லை, பிறப்பால் எற்றத்தாழ்வு இல்லை, ஆணுக்கு பெண் இளைத்தவள் இல்லை, பூர்வஜென்ம கர்மா என்பது பிராமணியம் சொன்னப் பொய் என்று சொன்னவரையே கடவுளாக்கிய பெருமை அறிவில்லாத நம்மையே சேரும் என்பதில் ஐயமில்லை.
அந்த புத்தரையும் விஷ்ணுவின் அவதாரமாக அக்கிவிட துடிக்கும் பிராமணியத்தின் மற்றொரு சூழ்ச்சியே இந்த இந்துமதம் என்பேன்.

இதில் இறைவன் எங்கு வந்தான் என்பதுதான் புதிராக இருக்கிறது.

//நீங்கள் பெளத்த மதத்தின் மீது நல்லெண்ணம் கொண்டவர் என்று நினைக்கிறேன்//

மதம் என்ற வார்த்தையே தடை செய்யவேண்டிய ஒரு சொல் என்று கருதுபுவன் நான். 2000 வருடங்களுக்கு முன் பிராமணியத்தை எதிர்த்த புத்தரின் கொள்கைகள் சில என்னை கவர்ந்தது என்று சொல்லலாம். ஆனால் இன்றைய புத்த மார்க்கம், அதுவும் இலங்கையில் வேறு விதமாக போய்விட்டது.

//புத்தரின் பல்லுக்கு இலங்கையில் கோயில் இருப்பதாக சொல்கிறார்களே?. அதுபற்றி உங்கள் கருத்தென்ன?//

காட்டுமிராண்டித்தனம். சமாதியடையும் போது குருநானக் தாடியும் ஜடாமுடியும் வைத்திருந்திருந்தார் என்பதற்காக இன்றைக்கும் சீக்கிய சமூகமே ஜடாமுடியோடு அலைவதும் அதே போல் ஒரு காட்டுமிராண்டித்தனம் தான்.

மற்றபடி உங்கள் "இறைவன்" யார் என்று சொல்வீர்களா?

SHIVAS said...

இப்போது, உங்கள் "இறைவன்" யார் என்று சொல்வீர்களா?

SHIVAS said...

நன்றி ராஜா அவர்களே.

kram said...

hello

how do you create blog pages in tamil ? is it possible to create blog pages in other languages. i am specifically interested in creating my blog page in malayalam. would appreciate any info you can pass on regarding writing blogs in malayalam. pls email me ramanathank@hotmail.com