Tuesday, November 23, 2004

ஊர் வரும் முன்னே...

காஷ்மீர், பம்பாய், மெட்ராஸை சேர்ந்த மூனு கிறுக்கர்களை ஒரு ஃபிளைட்ல ஏற்றி இந்தியாவை சுற்றிபார்த்துட்டு வாங்கன்னு அனுப்பிச்சாய்ங்க. காஷ்மீர் நெருங்குகிற சமயம்பார்த்து மூனு கிறுக்கர்களும் கைகளை வெளியிள நீட்டினாய்ங்க. காஷ்மீர் கிறுக்கன் எங்க ஊரு வந்துடிச்சுடான்னு கத்தினான்.

மற்ற இரண்டு கிறுக்கர்களுக்கும் ஆச்சரியம். எப்படி பாய் கண்டுபிடிச்சீங்கன்னாய்ங்க. அட செம கூலா இருக்கு அதவைத்து கண்டுபிடிச்சேன் என்றான்.

வண்டி பம்பாய் மேலே பறந்துகிட்டிருக்கிற சமயமா பார்த்து மூனு கிறுக்கனுங்களும் கைகளை வெளியிள நீட்டினாய்ங்க. பம்பாய் கிறுக்கன் எங்க ஊரு வந்துடிச்சிடான்னு கத்தினான்.

மற்ற இரண்டு கிறுக்கர்களும் ஆச்சரியமாய் எப்படி ஜீ கண்டுபிடிச்சீங்கன்னாய்ங்க. என் கைகடிகாரத்தை எவனோ அடிச்சிட்டானுவப்பா என்றான்.

ஃபிளைட் மெட்ராஸ் மேலே பறந்துச்சி. நம்ம ஆளு ஃபிளைட் ஜன்னல்கதவ திறந்தான். கூவம் நாற்றம் பொறுக்கமுடியாம காஷ்மீரியும் பம்பாய் வாலாவும் மூக்கைப் பொத்துனது பார்த்து அப்பாடா எங்க மெட்ராஸ் வந்துடிச்சி அப்படின்னான்.

No comments: