Monday, November 29, 2004

ஐயோ கடவுளே! எனக்கு என்னாச்சு?

மனையுடன் முதல்முதலாக கூடும்போது சிலருக்கு தர்மசங்கடமான நிலை உண்டாகலாம். முன் அனுபவமில்லாத நம்மாளுக்கு புதுமனைவியை திருப்திபடுத்தவேண்டுமே, (இல்லையென்றால்) நம்மை ஆண்மையில்லாதவன் என்று நினைப்பாளே போன்ற எண்ண ஓட்டம் ஏற்படுத்தும் பதட்டத்தினால் ஆணின் விறைப்புதன்மை மட்டுதலாக காணப்படும். இதில் நமது அண்ணிகள் வேறு, "டேய் கொழுந்தா! உங்கண்னே போல தூங்கிடாதே! இன்னிக்கு மட்டும் ஒன்றும் நடக்கலேன்னு எனக்கு தெரிய வந்தா அப்புறம் நடக்கறதே வேற", என்று பற்களை கடித்துக்கொண்டு மிரட்டியது ஞாபகத்திற்கு வரும்.

ஐயோ உன் மானம் கப்பலேறப்போகிறதே என்று நம்ம Male kind, மீண்டும் மீண்டும் ட்ரை பண்ணுவார். ம்ஹும். ஒன்றும் ஒத்து வரவேயில்லை. தலையில் கைவைத்துக்கொண்டு என் சோக கதையை கேளு தாய் குலமே! அட தாய்குலமே! என்று மனதுக்குள் புலம்பும் நேரத்தில் எப்போதே தினதந்தியில் பார்த்த "உங்களுக்கு ஆண்மை குறைவா! கவலை வேண்டாம். இவரின் அப்பா, அப்பப்பா, பெரியப்பா, சித்தப்பா, தாத்தா, பாட்டனார் எல்லாரும் இதே டாக்டர் தொழில் செய்து (குலதொழில் போலும்) சென்சுரி அடித்ததோடு நிற்காமல் மாதம் அனைத்து தேதிகளிலும் ஒவ்வொரு டவுனாக வந்து மருத்துவம் பார்க்கிறார். பிரதி 29-ந் தேதி மயிலாடுதுறை காளியாகுடி லாட்ஜிக்கு விஜயம் செய்யப்போகிறார், 30-ந்தேதி சிதம்பரம் போகப்போகிறார் பராக்! பராக்!" என்ற அரை பக்க விளம்பரம் ஞாபகத்திற்கு வரும்.

தலையில் துண்டைப்போட்டுக்கொண்டு யாருக்கும் தெரியாமல் அவரைப் போய் பார்த்து ஆயிரம் ரூபாயிக்கு அவர் கொடுத்த மாத்திரை மருந்துகள் வாங்கி சாப்பிட்ட பிறகு இரண்டு நாளில் விஷயம் சரியாகிவிடும். இதற்கு காரணம் அந்த டாக்டர்தான் என்று நினைத்துக்கொள்வார். (இதில் ஸ்பெஷல் பேக்கேஜ் மெடிஸன் தேவை என்றால் ஐந்து ஆயிரம்). ஒரு ஆண் தன்னை ஆண்மையற்றவன் என்று சொல்வதை தாங்கிக்கொள்ள மாட்டான். அதனை பெறுவதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் ரகசியமாக செலவு செய்வான் என்ற மனித பலவீனம் தெரிந்து செய்யும் வியாபாரம் இது. யாரும் இவர்களிடம் ஏமாந்துவிடாதீர்கள்.

உங்களுக்கு தெரியுமா? வயாகரா போன்ற மாத்திரைகள் ஏற்படுத்தும் கில்மா-க்கள் மனது சம்பத்தப்பட்ட விஷயம் என்பதை தெரிவிப்பதற்காக, மாத்திரை தயாரிக்க உதவும் டியூப்களில் அரிசி மாவை அடைத்து "வயகராவெல்லாம் சும்மா. இது வயகராவின் அம்மா" என்று 100 பேருக்கு கொடுத்து டெஸ்ட் செய்தபோது, மூன்றில் இரண்டுபகுதியினர் மாத்திரை சூப்பராக வொர்க்அவுட் ஆனது என்றார்களாம்.

முதலில் ஒன்றை தெரிந்துக்கொள்ள வேண்டும். பத்திரிகையில் சினிமா நடிகையின் கவர்ச்சி விளம்பரத்தை பார்த்தவுடன் ஏற்படுகின்ற கிளுகிளுப்பு திருமணம் ஆனபுதிதில் உங்கள் மனைவியுடன் இருக்கும்போது வராது. காரணம் மேற்சொன்ன பதட்டமே தவிர வேறொன்றும் இல்லை. மனது பதட்டம் இல்லாமல் இருந்தால் எல்லாம் சரியாகிவிடும். யு அல்ரெடி ஃபிட் ஃபார் செக்ஸ்.

1 comment:

Anonymous said...

Useful advises