Sunday, January 16, 2005

இன்னொரு காரணம்

ஆர்.எஸ்.எஸ் மூலகர்த்தாக்களே காந்தியாரை கொலை செய்த அமைப்பைச் சார்ந்தவர்கள் தான் என்ற உண்மை வெளியாகி விட்டால், அவர்கள் முகத்திரை கிழிந்துவிடும் அல்லவா? எனவேதான் இந்த இருட்டடிப்பு சூழ்ச்சி.

(தொடர்... 11)


இன்னொரு காரணமும் உண்டு.

ஆர்.எஸ்.எஸ்.என்ற அமைப்பை உருவாக்கிய பெருமை ஹெட்கேவருக்கு மட்டுமே கிடைக்க வேண்டும். மற்றவர்களுக்கு அந்தப் பெருமை ஏற்பட்டுவிடக் கூடாது என்பது மற்றொரு நோக்கம். தலைவரைப் பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காக இல்லாத பெருமைகளை ஏற்றிக் சொல்வது இவர்களின் வாடிக்கை.

ஆனால், என்னதான் இரும்புத் திரைகளைப் போட்டு மறைத்தாலும் உண்மைகள் வெளிவராமல் போய்விடுமா?

காந்தியாரைக் கொலை செய்த கோட்சே, ஒரு இந்து மகாசபைக்காரர் என்றவுடன், தங்களுக்கும் இந்து மகாசபைக்கும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று அறிவித்தார். ஆர்.எஸ்.எஸ்.அமைப்பில் நிறுவனர்களே, இந்து மகாசபைத் தலைவர்கள்தான்.

ஆர்.எஸ்.எஸ்.துவக்கநாளில் ஹெட்கேவர் இல்லத்தில் கூடிய அந்த '5 பேர்' யார் என்ற முகவரிகள் எப்படி வெளிச்சத்துக்கு வந்தன.

அந்த அய்வர் குழுவிலே ஒருவர் எல்.வி.பராஞ்சிபே, ஹெட்கேவர் இறந்து போனவுடன், தனது நினைவலைகளை இந்தப் பராஞ்சிபே ஒரு கட்டுரையில் சுழலவிடுகிறார்.

ஆர்.எஸ்.எஸ். துவக்கிய நாளில் கூடிய அந்த அய்ந்துபேர்கள் பெயர்களையும் அவரே குறிப்பிட்டு ஒரு கட்டுரையைத் தீட்டிவிட்டார். அந்தக் கட்டுரையில் ஆர்.எஸ்.எஸ். மூலவர்களாக விளங்கிய இந்துமகாசபைத் தலைவர்கள் 5 பேரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுவிட்டன. (இந்தக் கட்டுரை 'கேசரி', என்ற நாளேட்டில் ஜூலை 5, 1940ல் வெளிவந்திருக்கிறது.)


அதுமட்டுமல்ல. இன்னொரு திடுக்கிடும் செய்தி! 1930ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்.தலைவர் ஹெட்கேவர் சிறைச்சாலையில் இருந்தபோது ஆர்.எஸ்.எஸ்.தலைமைப் பதவியான 'சங்சாலக்' பதவியை ஏற்று ஆர்.எஸ்.எஸ்.ஸையே வழிநடத்திச் சென்றவர் யார் தெரியுமா? எல்.வி.பராஞ்சிபே என்ற அய்வர் குழுவில் ஒருவராக இருந்த அதே இந்து மகாசபைத் தலைவர் தான்! பின்னர் 1945ம் ஆண்டு காஷிநாத் பாந்த்லிமாயி (இவர் அப்போது மராட்டிய மாநில ஆர்.எஸ்.எஸ்.தலைவர்) பாபாராவ் சவர்க்கார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒரு கட்டுரை எழுதினார். இந்த பாபாராவ் சவர்க்கார் என்ற இந்து மகாசபைத் தலைரவரும் ஆர்.எஸ்.எஸ்.சை துவக்கிய அய்வர் குழுவில் ஒருவர் என்ற உண்மையை இந்த இரங்கல் கட்டுரையில் அந்த மராட்டிய ஆர்.எஸ்.எஸ்.காரர் வெளியிட்டிருக்கிறார். ஆனாலும் அவர்களையும் அறியாமல் உண்மைகள் வெளிவந்து விட்டன.

(இந்தக் கட்டுரை வெளியான பத்திரிகை 'விக்ரம்' என்ற மராட்டிய வார ஏடு - மார்ச் 31,1945)
____________
நன்றி:
விடுதலை இராசேந்திரன் அவர்களின்
"ஆர்.எஸ்.எஸ் - ஓர் அபாயம்"

No comments: