Saturday, January 01, 2005

காந்தியை தாக்கினார்கள்

(தொடர்....6)

ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவராக விளங்கிய வரும் ஆர்.எஸ்.எஸ்.எதிர்ப்புக் காளத்திலே முன் வரிசையில் நின்றவருமான ராஜ்நாராயண் வெளியிட்டுள்ள ஒரு தகவல் இவர்களின் பார்ப்பன சுயரூபத்தை அம்பலமாக்குகிறது.

1979ம் ஆண்டு 25ம் தேதியிட்ட 'சண்டே' ஆங்கில வார இதழுக்கு ராஜ்நாராயண் அளித்த ஒரு பேட்டியில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

'கடந்த நாற்பது ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்.அமைப்பை நான் மிகவும் துல்லியமாகக் கவனித்து வருகிறேன். 1940-ஆம் ஆண்டில் இவர்கள் காந்தியைத் தாக்கினார்கள். 1942ஆகஸ்ட் 9ம் தேதிக்குப் பிறகு காங்கிரஸ்காரர்களைத் தாக்க ஆரம்பித்தார்கள் தொடர்ந்து பிரிட்டிஷ்காரர்களின் உளவாளிகளாகவே அவர்கள் செயல்பட்டார்கள். அவர்களுக்கு ஒரு கொள்கை உண்டு. பிரிட்டிஷ்காரர்கள் பேஷ்வா பிராமணர்களிடமிருந்து தான் ஆட்சியைப் பிடித்தனர். எனவே பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறும் போது ஆட்சி மீண்டும் பேஷ்வா பிராமணர்களிடமே திருப்பி தரப்பட வேண்டும் என்பது அவர்களின் கொள்கை.

ஆனால் பேஷ்வா பிராமணர்களின் ராஜ்யம் என்று சொன்னால் மக்கள் ஆதரவைப் பெற முடியாது. எனவே தான் அவர்கள் ஏற்கனவே ஒலித்து வந்த கோஷங்களை மாற்றிக் கொண்டு - பார்ப்பராஷ்டிரம் என்பதற்கு பதிலாக இந்து ராஷ்டிரம் என்று சொல்ல ஆரம்பித்தனர். "என்று உண்மையை தோலுரித்துக் காட்டியிருக்கிறார் ராஜ்நாராயன்!

இந்து ராஷ்டிரம் என்று சொல்லப்படுவதன் பின்னணி என்ன என்பது இப்போது புரிகிறதா?

பிரிட்டிஷாரிடமிருந்து மீண்டும் மராட்டிய பார்ப்பனர்களின் கைக்கு ஆட்சியைக் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தோடுதான் மராட்டிய பார்ப்பனர்கள் இந்த இயக்கத்தில் முன்னணியில் நின்றார்கள்!

அகில இந்திய தலைவராக மராட்டியரல்லாத ஒரு பார்ப்பனரல்லாத சமுதாயத்தைச் சார்ந்த - காந்தியார் உருவாகி வந்ததை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை!

பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை கிடைக்க வேண்டுமானால் இந்த விடுதலை இயக்கத்துக்கு ஒரு மாராட்டியப் பார்ப்பனரே தலைவராக இருக்க வேண்டும் என்பது இந்த சதிக் கூட்டத்தின் வெறித்தனமான கருத்தாக இருந்தது!

இந்து மகாசபையின் முன்னணித் தலைவரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முன்னோடியுமான டாக்டர். பி.எஸ். மூஞ்சி என்று மராட்டியப் பார்ப்பனர் காந்தியாருக்கு எதிரான சதியைத் துவக்கி நடத்த ஆரம்பித்தார். ஆர்.எஸ்.எஸ்.தலைவரான ஹெட்கேவர் என்ற பார்ப்பனர் இந்த மூஞ்சியின் நெருக்கமான சீடர்.

அநாமதேய மிரட்டல் கடிதங்களை எழுதும் அவர்களின் அற்பத்தனங்கள் இன்றைக்கு மட்டுமல்ல. அன்றைக்கே இருந்தது. அன்றைக்கு காந்தியாருக்கே அநாமதேய மிரட்டல் கடிதங்களை இந்த கூட்டம் எழுதியது. 'காந்தியே, பாலகங்காதர திலகரைப் போல் இந்துக்களை ஒன்று படுத்தி இந்து அடிப்படையில் சுயராஜ்யப் போராட்டத்துக்கு போராடாத நீ ஒரு கோழை' என்று காந்தியாருக்கே மிரட்டல் கடிதங்களை எழுதினார்கள்.

காந்தியார் மனம் குமுறிப்போய் 'யங் இந்தியா' பத்திரிக்கையில் இதற்கு பதில் எழுதுகிறார்.

"எனக்கு அநாமதேய கடிதங்கள் வருகின்றன. திலகர் வழியில் ஏன் செல்லவில்லை என்று அதிலே கேட்கிறார்கள். நான் சொல்லிக்கொள்கிறேன். என்னுடைய முறை திலகர் காட்டிய வழி முறை அல்ல. அதன் காரணமாகவே எனக்கு பல மாராட்டியத் தலைவர்களிடமிருந்து தொல்லைகள் வருகின்றன." (காந்தியார்- 'யாங் இந்தியா"-ஜுலை 13,1921)

No comments: