Sunday, January 23, 2005

குரு பக்தி ஒன்றே

(தொடர் 14)

இப்படி குரு பக்தியோடு, குருவின் கருத்துக்களில் சீடர்கள் கேள்வி கேட்பதே குற்றம் என்ற முறையோடுதான், ஹெட்கேவர் இந்த அமைப்பை நடத்திச் சென்றிருக்கிறார்! சிந்தனைகளுக்கு, விளக்கங்களுக்க அங்கே இடம் இல்லை!

எனவே தான் 'நீங்கள் டாக்டர் ஜீயைப் பற்றி(ஹெட்கேவர்) தெரிந்து கெள்ள வேண்டுமா? ஆர்.எஸ்.எஸ்.பற்றி தெரிந்து கொள்ளுங்கள் ஆர்.எஸ்.எஸ்.பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமா? டாக்டர்ஜி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்" என்று ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திரும்ப திரும்பச் சொல்லி கொண்டு இருக்கிறார்கள்.

"மரியாதைக்குரிய டாக்டர்ஜி அவர்களும் ஆர்.எஸ்.எஸ்.சும் ஒன்றுக்கொன்று இணைந்தது. டாக்டர்ஜி வாழ்க்கையைப் படித்தால் அதிலிருந்து கிடைக்கும் எழுச்சி உணர்வுகளால் ஆர்.எஸ்.எஸ்.சின் முறையான வளர்ச்சியை தெரிந்து கொள்ள முடியும்."

-என்கிறார் மறைந்த ஆர்.எஸ்.எஸ்.முன்னால் தலைவர் தேவரஸ் (ஆதாரம்: சி.பி.பிஷிகார் எழுதிய நூல் பக்-5) எனவே ஹெட்கேவர் வாழ்க்கை வரலாற்று விவகாரங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தால், அது ஆர்.எஸ்.எஸ்.தன்மையை பிரதிபலிக்கும் என்பதால், நாமும் அந்த ஆராய்ச்சியில் சற்று ஆழமாக இறங்குவோம்!

நன்றி:
விடுதலை இராசேந்திரன் அவர்களின் "ஆர்.எஸ்.எஸ் - ஓர் அபாயம்"

No comments: